அதிசய மனிதர்



சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஃபிராங்கோ விட்டாலி கொஞ் சம் விநோதமான மனிதர். கடந்த 40 வருடங்களாக ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகளுடன் வசித்து வருகிறார். இதுவரைக்கும் திருமணமே செய்துகொள்ளவில்லை. யாரோ ஒரு நிருபர் இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு செய்தியை இணையத்தில் வெளியிட, உலகத்துக்கு அறிமுகமானார் விட்டாலி.

ஓர் இடத்தில் நிரந்தரமாகத் தங்கமாட்டார். அப்படி தங்குவதற்கு வீடு என்று எந்த இருப்பிடமும் இவருக்கு இல்லை. தான் வைத் திருக்கும் டிரக் வண்டி தான் வீடு. நாடோடியைப் போல அலைந்து கொண்டேயிருப்பார்.

அதிகபட்சமாக ஓர் இடத்தில்  ஒன்பது மாதங்கள் தங்கியிருக்கிறார். விட்டாலி இடம் பெயரும்போது செம்மறி ஆடுகளையும் தன்னுடன் அழைத்துச் செல்வது தான் இதில் ஹைலைட். அவ்வளவு சுலபத்தில் மனிதர்களால் சென்று விட முடியாத இடங்களுக்கே விட்டாலி அதிகமாகப் பயணிக்கிறார்.

இப்போது விட்டாலி தனது 800 செம்மறி ஆடுகளுடன் சுவிட்சர்லாந்தின் தென்பகுதியில் உள்ள உபர்ப்யூரான் என்ற மலைப்பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார். அதுவும் 62 வயதில் கால்நடையாக!