பேரிடர் இழப்பு!
இந்தியாவில் கடந்த 20 ஆண்டு களில் நடந்த இயற்கை பேரிடர்களால் 79.5 பில்லியன் டாலர்கள் (ரூ.7,950 கோடி) இழப்பு நேரிட்டுள்ளதாக ஐ.நா சபையின் பேரிடர் மேலாண்மை அறிக்கை (1998-2017) தெரிவிக்கிறது. பேரிடர் பிரச்னைகளால் ஏற் படும் பொருளாதார இழப்பு 151% அதிகரித்துள்ளது (78-98 காலகட்ட ஒப்பீடு).
 உலகளவில் இயற்கை சூழல்களால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு 2.908 ட்ரில்லியன் டாலர்களாக (ரூ.2 லடசம் கோடிக்கும் அதிகம்) உள்ளது. அமெரிக்கா (944.8 பில்லியன்), சீனா (492.2 பில்லியன்), ஜப்பான் (376.3 பில்லியன்) என பேரிடர்களின் இழப்பு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. புயல்(28.2%), வெள்ளம் (43.4%), நிலநடுக்கம் ஆகியவை ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார இழப்புகளுக்கு முக்கிய காரணிகள்.
பொருளாதார இழப்புக்கு 71% இயற்கை பேரிடர்களே முக்கிய காரணங்களாக 7 ஆயிரத்து 255 சம்பவங்களை ஆராய்ந்ததில் தெரியவந்துள்ளது. இப்பேரிடர்களால் 4.4 பில்லியன் மக்கள் காயமுற்றும், 1.3 மில்லியன் மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். மக்கள் உயிரிழப்பு 56 சதவிகிதமாக அதிகரிக்க நிலநடுக்கமும், சுனாமியும் காரண மாக உள்ளதை ஐ.நாவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
|