வாசகர் கவிதைகள்
ஏமாற்றம்கரையைத் தொட்டுதிரும்பும்போதெல்லாம்யாரையோ தேடும்ஏமாற்றத்துடன் அலைகள்! என்.உஷாதேவி, மதுரை.
காத்திருப்புவாசலைத் தெளித்துவிட்டுகாத்திருக்கிறது மழை,கோலம் போடவரும்உன் தரிசனம் வேண்டி! எஸ்.சங்கர், திருப்பரங்குன்றம்.
ஆசைவீடு விண்ணைத் தொட்டாலும்குழந்தை மண்ணைத் தொட்டுவிளையாடவே விரும்புகிறது! கே.தண்டபாணி, பொள்ளாச்சி.
செய்திவம்பிழுப்பதையே பிழைப்பாய்வைத்திருப்பவன் என்பார்கள்வேலுவைப்பற்றி சொல்லும்போது!ஜெயிலுக்குப்போனதுகொலைசெய்தது எல்லாவற்றையும்சாதாரணமாய் எடுத்துக்கொண்டவர்கள்,அவன் திருந்தியதை மட்டும்ஊரெல்லாம் பரப்பினார்கள்அசாதாரணச் செய்தியாய். லதாமகன், நாங்குனேரி
வேதனைஎன்ன பிரச்னையாக இருக்கும்?விளக்கில் உயிரை மாய்த்துக்கொண்டவிட்டில் பூச்சிக்கு! வைகை.ஆறுமுகம், வழுதூர்.
ரசனைபாதையெங்கும் பூக்கள்... ரசிக்க மனமில்லைஇறுதி ஊர்வலம்! தங்க.நாகேந்திரன், செம்போடை.
பாடம்தன் ஒவ்வொரு தவறிலும்பெற்றோருக்குகற்றுத் தருகிறது குழந்தை,தன்னை எப்படிவளர்க்க வேண்டுமென்றபாடத்தை! வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
|