குடும்ப அமைதியை சீர்குலைக்கும் ஆன்லைன் ஷாப்பிங்!



பருப்பு முதல் லேப்டாப் வரை சகலத்தையும் ஆன்லைன் ஷாப்பிங்கிலேயே வாங்குகிறோம். இதையே சாதகமாகக் கொண்டு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மாதத்துக்கு இரண்டு முறையாவது பெரும் தள்ளுபடியில் பொருட்களைக் கொடுத்து வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்து விடுகின்றன. தள்ளுபடியில் மயங்கி சிலர் தேவையே இல்லையென்றாலும் எதையாவது ஆன்லைனில் ஷாப்பிங் செய்தாக வேண்டும் என்ற போதைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அதாவது மாதம் ஒரு ஷாப்பிங் செய்தவர்கள், வாரம் ஒருமுறைக்கு மாறி, கடைசியில் தினமும் எதையாவது ஆர்டர் செய்கிறார்கள். தள்ளுபடிக்காக காத்திருக்கிறார்கள்.அடுத்து பொருட்களை வாங்கவில்லை என்றாலும் கூட ஷாப்பிங் தளத்துக்குச் செல்வது ஒரு பழக்கமாக மாறிவிடுகிறது.
தினமும் குறைந்தபட்சம் 40 நிமிடங்களாவது ஷாப்பிங் இணையதளங்களில் நேரத்தைச் செலவிடுகின்றனர்.

இந்த மனநிலையை ‘Buying-Shopping Disorder’ என்று எச்சரிக்கிறது ஹனோவர் மெடிக்கல் ஸ்கூல். ‘‘இதனால் குடும்பத்தின் அமைதி குலைந்து பொருளாதார ரீதியாக பெரும் சரிவை சந்திக்க நேரிடும்...’’ என்று எச்சரிக்கை செய்கின்றனர் உளவியலாளர்கள்.

த.சக்திவேல்