ராமனாலும் முடியாது!



உன்னாவோ கற்பழிப்பு வழக்கில் சிக்கிய குல்தீப்சிங் செங்காரைக் காப்பாற்ற முயற்சித்த பாஜக எம்எல்ஏ சுரேந்திரா சிங், ‘‘ராமனாலும் வல்லுறவுகளைத் தடுக்க முடியாது!’’ எனப் பேசி சர்ச்சைத் திரியைக் கிள்ளியுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பைரியா பஸ்தி தொகுதி எம்எல்ஏவான சுரேந்திராசிங், ‘‘சமூகத்தில் தடம் புரளும் நிகழ்வுகளால் கற்பழிப்புகள் நிகழ்கின்றன. கடவுளான ராமனே வந்தாலும் இதனைத் தடுக்கமுடியாது. இது மக்களின் குணங்களைப் பொறுத்தது. அரசுக்கு தொடர்பில்லை...’’ என பேட்டியளித்து பிரபலமாகியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக வல்லுறவு தொடர்பான புகார்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. சுரேந்திராசிங் இதற்கு முன்பும் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என்றும், காங்கிரஸை கௌரவர்கள் என்றும், நரேந்திர மோடியை அர்ஜுனன் என்றும் புகழ்ந்து பேசியவர்!

- ரோனி