எங்கு என்ன



* இரு கரைகளை அணைத்து
ஊரினை அழகாக்கிய
ஆறுகள் இப்போது எங்கு போயின?

* மதகுகள் திறக்க
மகிழ்ச்சியில் குதித்த
ஏரிகள் எல்லாம் எங்கு சென்றன?

* எருமைகள் களித்து
நீச்சல் அடித்து பழகிய
ஊர்புறத்து குட்டைகள்
என்னதான் ஆயின?

* உயர்ந்து ஓங்கிய மரங்கள்
சிறு மலைகள்
மறைந்ததற்கு என்ன காரணம்?

* முப்போகம் விளைந்த
முப்பாட்டன் நிலங்கள்
இப்போது என்னதான் செய்கின்றன?

* யாவும்
மனிதன் வசிக்கும் வீடுகளாய் மாறி
மாண்டு கிடக்கின்றன!

இ.எஸ்.லலிதாமதி