தத்துவம் மச்சி தத்துவம்
‘‘தலைவர் தினமும் மாடியில ஒவ்வொரு படிக்கட்டுல உட்கார்ந்து குடிக்கறாரே... ஏன்?’’ ‘‘படிப்படியா குடியை விடறாராம்!’’ - அஜித், சென்னை-126.
‘‘ஓட்டுக்கு பணம் குடுக்கும்போது தலைவரைக் கையும் களவுமா பிடிச்சிட்டாங்களா... அப்புறம்?’’ ‘‘ஓட்டு வங்கியில பணத்தை டெபாசிட் பண்றோம்னு சொல்லிட்டாரு!’’ - எஸ்.எலிசபெத் ராணி, மதுரை.
‘‘தலைவர் வீட்டுக்கு பொண்ணு கேட்கப் போனீங்களே... என்ன சொன்னார்?’’ ‘‘234 பொருத்தமும் இருந்தாதான் பொண்ணு தருவேன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்...’’ - யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
‘‘தலைவர் வீட்டுக்கு பொண்ணு கேட்கப் போனீங்களே... என்ன சொன்னார்?’’ ‘‘234 பொருத்தமும் இருந்தாதான் பொண்ணு தருவேன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்...’’ - யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
என்னதான் வெயிலுக்கு மோர் கொடுத்து உபசரித்து, வேட்பாளர் தேர்வு நடத்தினாலும், அதையும் ‘நேர் காணல்’னுதான் சொல்வாங்க... ‘மோர் காணல்’னு சொல்ல மாட்டாங்க! - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
‘‘தலைவர் மேலே யாரும் அவதூறு வழக்கு போட முடியாது...’’ ‘‘எப்படிச் சொல்றே..?’’ ‘‘அவர் பேசறதுதான் யாருக்கும் புரியாதே!’’ - தீ.அசோகன், சென்னை-19.
‘‘தனியாகத் தேர்தலைச் சந்திக்கிறோம் என அறிவித்துவிட்டு, தேர்தல் பயத்திலும், டெபாசிட் போய்விடுமோ எனும் கவலையிலும் இருக்கும் தலைவர் அவர்களை அடுத்தபடியாக பேச அழைக்கிறேன்...’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
|