நிரோஷா நடிக்கும் அக்னி நட்சத்திரம்!



‘ரீல்’ படத்தில் நாயகனாக நடித்தவர் உதய்ராஜ். தற்போது உதயா நடிக்கும் ‘அக்னிநட்சத்திரம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட இவர் தமிழில் நடிப்பதை பெருமையாக எண்ணுகிறாராம். இவர் வக்கீலாக இருந்து நடிகராக மாறியவர்.
‘‘கேரளாவில் பிறந்தாலும் தமிழ்ப் படம் ஒண்ணுவிடாமல் பார்த்துவிடுவேன்.

தமிழ் சினிமாவில் நடிக்கக் காரணம் தமிழ் சினிமாவின் ஸ்டைல், மேக்கிங் பிடிக்கும். மலையாளத்தில் யதார்த்தமான படங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால் தமிழில் பாலிவுட் ஸ்டைலுக்கு இணையாக படம் எடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தமிழ்ப் படங்கள் பாலிவுட் படங்களுக்கு இணையாக கவனம் பெறுகிறது.

அந்தவகையில் தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. நாயகன் என்றில்லாமல் சின்ன கேரக்டர் கிடைத்தாலும் போதும் என்று நினைத்தபோதுதான் ‘ரீல்’ படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆடிஷனில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். ஹீரோவாக செலக்ட்டாவேன் என்று எதிர்பார்க்கவில்லை. வாய்ப்பு கொடுத்த இயக்குநர் முனுசாமிக்கு என் நன்றி எப்போதும் இருக்கும்.

மலையாளத்தில் சில வீடியோ ஆல்பங்கள், ‘கவ் பாய்’ படத்தில் முக்கியமான ரோலில் நடித்ததன் மூலம் சினிமாவைப் பற்றிய புரிதல் இருந்தது. கேமரா ஃபியர் இல்லாமல் நடிக்க முடிந்தது.

நான் நடித்த ‘ரீல்’ படத்தைப் பார்த்துவிட்டுத்தான் ‘அக்னி நட்சத்திரம்’ வாய்ப்பு கிடைத்தது. உதயா, விதார்த், நிரோஷா என்று சீனியர்களுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.

தமிழ் சினிமா ரசிகர்கள் புதிய முயற்சிகளுக்கும் புதுமுகங்களுக்கும் எப்போதும் வரவேற்பு கொடுப்பவர்கள். மற்ற மொழிகளைப் பொறுத்தவரை சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமே. ஆனால் தமிழ் ரசிகர்கள் அப்படியல்ல. சினிமா அவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கம்.

நடிகர்களில் விஜய் சாரை பிடிக்கும். எனக்கு ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும்  என்று ஆசையில்லை. எனக்கான ஸ்கோப் இருந்தால் கேரக்டர் ரோலிலும் நடிப்பேன். என்னுடைய ஆசையெல்லாம் சினிமாவில் பிஸியாக இருக்க வேண்டும். எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க ரெடியாக இருக்கிறேன். சினிமாதான் என்னுடைய வாழ்க்கை. சினிமாவுக்காக என்னை அர்ப்பணிக்க தயார்’’ என்கிறார் உதய்ராஜ்.

- சுரா