யார் இவன்?



கொலையாகும் புதுமனைவி!

திருமணமான மறுநாளே தன் காதல் மனைவியை கொலை செய்துவிடுகிறார் சச்சின் ஜோஷி. கோவா சிறையில் வைத்து சச்சினை விசாரிக்கிறது  போலீஸ் டீம். அங்கு ஒரு கூட்டம் சச்சினைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டுகிறது.

அதை தடுக்கும் விசாரணை அதிகாரி கிஷோர்  கொலைக்கான காரணத்தையும், உண்மையான கொலையாளி யார் என்பதையும் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது விறுவிறு க்ளைமாக்ஸ்.

நாயகன் சச்சின் ஆக்‌ஷன், ரொமான்ஸ் காட்சிகளில் பின்னியெடுக்கிறார். நாயகி ஈஷா பாடலுக்கு மட்டும் வந்து போகிறார். நாயகியின் தோழியாக  வரும் தன்யா பாலகிருஷ்ணன் சிறப்பாக நடித்திருக்கிறார். சதீஷ் பொறுமையை சோதிக்கிறார். காக்கிச்சட்டைக்குள் கச்சிதமாக உட்கார்ந்து கொள்ளும்  கிஷோரின் நடிப்பு அருமை. பிரபு வழக்கம் போல் எதிர்பார்த்ததையும், எதிர்பார்க்காத  நடிப்பையும் வழங்கியிருக்கிறார்.

தமனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை. பினேந்த்ரா மேனனின் ஆர்ப்பாட்டம் இல்லாத ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.  பழைய கதையை திரைக்கதை மூலம் புதியதாக காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் டி.சத்யா.