நாள் முழுக்க இதே வேலையா?
சரோஜாதேவி பதில்கள்
* தற்போது மன்னராட்சி இருந்தால் எப்படி இருக்கும்? - த.சத்தியநாராயணன், அயன்புரம். அவலை நினைத்து உரலை இடித்த கதையாக நீங்களெல்லாம் அந்தப்புர அழகிகளை நினைத்து...
* சேலை கட்டத் தெரியாத மனைவிக்கு கணவன் கட்டிவிடலாமா? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர் மாவட்டம்) அப்புறம் நாள்முழுக்க இதே வேலையாதான் இருப்பீங்க. வேணாம். நாங்க சுடிதாரே போட்டுக்கறோம்.
* கூர்மையான மூக்கு உள்ள பெண்கள் அதிகமாக கோபப்படுகிறார்களே? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம். ஹாரன் அடித்தால் ஆட்டோ ஸ்டார்ட் ஆகும் என்பதைப்போல சொல்கிறீர்களே?
* உதட்டில் நிஜமாகவே தேன் வடியுமா? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. அதென்ன தேன்கூடா? இதெல்லாம் சும்மா கிளுகிளுப்புக்கு சொல்றது சார்.
* ஞானப்பழம் கிடைத்தால் யாருக்கு கொடுப்பீர்கள்? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. இருக்கிறதையே யாருக்கு கொடுக்குறதுன்னு தெரியலை.
|