தமிழுக்கு வருகிறார் அமிதாப்!



அமிதாப்புக்கு நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்டகால ஆசை. ஆனால், அவருக்கு பொருத்தமான கதையும், கேரக்டரும் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது மூன்று புதிய கம்பெனிகள் எப்படியாவது அவரை தமிழுக்கு கொண்டுவந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. இயக்குநர் தமிழ்வாணன் ஜெயித்திருப்பதாக சொல்கிறார்கள்.

எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘கள்வனின் காதலி’, ஜீவன் நடித்த ‘மச்சக்காரன்’, அகில் நடித்த ‘நந்தி’ ஆகிய படங்களை இயக்கியவர் இவர். ‘உயர்ந்த மனிதன்’ என்கிற படத்தை எழுதி இயக்க இருக்கிறார். வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டிருக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோ. கதைக்கு திருப்பம் தரும் முக்கியமான வேடத்தில் அமிதாப்பை நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஒன்லைனரை கேட்டு திருப்தி அடைந்துவிட்ட அமிதாப், படத்தின் முழு ஸ்க்ரிப்டையும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். கதையும், கேரக்டரும் பிடித்துவிட்டால் அனேகமாக ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் உயர்ந்த மனிதர் தமிழ் பேசுவார்.

- தேவராஜ்