கோழி மல்லி குருமா



என்னென்ன தேவை?

சிக்கன் லாலிபாப் - 200 கிராம்,
எண்ணெய் - 100 மி.லி.,
கரம்மசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் - 1,
கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
பூண்டு - 10 பல்,
இஞ்சி - 1 துண்டு,
தனியா தூள் - 1½ டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பச்சைமிளகாய் - 5,
கறிவேப்பிலை - 1 கொத்து,
வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 50 கிராம்.

எப்படிச் செய்வது?

கொத்தமல்லியை நறுக்கி தனியாக வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்துகரம் மசாலாத்தூள், சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் மறுபடியும் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் சிக்கன் லாலிபாப்பை சேர்த்து சில நிமிடம் வேக விட்டு எடுக்கவும். பிறகு கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.