வாசகர் பகுதி
வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி
 பப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்தப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் வர்ணிக்கின்றனர்.
*பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல் படிப்படியாக ெமலியும். *பப்பாளிக்காயின் பாலை வாய்ப்புண் மேல் பூச புண்கள் ஆறும். *பப்பாளி இலை சாற்றை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் குறையும். *பப்பாளி கூட்டை பிரசவித்தப் பெண்கள் சாப்பிட்டால் பால் சுரப்பு கூடும். *பப்பாளிப்பழத்தை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி ஏற்படும். எலும்பு வளர்ச்சி ஆகும். பல் உறுதிப்படும். *பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பார்வை திறன் அதிகரிக்கும். *பப்பாளி இலைகளை அரைத்து கட்டிமேல் கட்டிவர கட்டி உடையும். *பப்பாளியின் விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும். *நன்கு பழுத்தப்பழத்தை கூழாக செய்து தேன் கலந்து முகத்துக்கு பூசி ஊறின பின் சுடுநீரில் கழுவ முகச்சுருக்கம் மாறி முகம் அழகு பெறும். *உடலில் இறந்துபோன செல்களை நீக்கவும், தோலை பளபளப்பாக வைக்கவும் பப்பாளி சிறந்த மருந்தாகும். எனவே பப்பாளியை உணவில் சேர்த்துக் கொண்டால் பல பயன்கள் கிடைக்கும்.
- சு.கண்ணகி, வேலூர்.
|