காய்கறிகளும் அதன் பலன்களும்!
வாசகர் பகுதி
 வாழைப்பூ: இதில் இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளது. ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது.
வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி, சிறு நீரகக் கல் அடைப்பை தடுக்கும்.
பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியங்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியை தூண்டும். உடலில் சர்க்கரை அளவை குறைக்கும்.
பீட்ரூட்: கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. மலச்சிக்கலைப் போக்கும். ரத்த சோகையை சரிப்படுத்தும்.
வெண்டைக்காய்: வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியை தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும்.
கோவக்காய்: வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. வயிற்றுப் புண், வாய்ப்புண் போன்றவற்றை நீக்கும்.
முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச் சத்து நிறைந்துள்ளது.
சுண்டைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்று புழுக்களைக் கொல்லும். உடல் வளர்ச்சியை தூண்டும்.
சுரைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
குடைமிளகாய்: வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறு நீங்கி செரிமான சக்தியை தூண்டும்.
அவரைக்காய்: புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலை போக்குகிறது.
கேரட்: உடலுக்கு உறுதியை கொடுக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
- பி.தீபா, ஓசூர்.
|