ரோல் மாடல்



பள்ளிப்பருவத்தைக் கடந்து வந்த அனைத்து மாணவர்களின் வாழ்விலும் ரோல்மாடலாக சில தனித்துவமான ஆசிரியர்கள்  இருப்பார்கள்.  அத்தகைய ஆசிரியர்களில் பத்து பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘குளோபல் டீச்சர் பரிசு’  வழங்கப்படுகிறது. சான்றிதழுடன் பத்து லட்ச ரூபாய் ஊக்கத்தொகையாக  அளிக்கப்படுகிறது.

2017-ம் ஆண்டு இப்பரிசைப் பெற்றவர்களில் சலீமா பேகமும் ஒருவர். இன்று பாகிஸ் தான் பெண்களின் ரோல் மாடல் இவர் தான். பாகிஸ்தானிலுள்ள குக்கிராமத்தில் பிறந்த சலீமா பேகம், பள்ளிப் படிப்பைக் கடக்கவே சிரமப்பட்டார். அக்கிராமத்தில் 10 வயது நிரம்பியவுடனே குழந்தைத் திருமணம் முடிவாகிவிடும். இச் சூழலில்தான் சலீமா பட்டப்படிப்பை முடித்தார்.

தான் படித்த படிப்பு தன்னைப் போன்ற பெண்களுக்கு பயன்படவேண்டும் என்று ஆசிரியரானார் சலீமா. லட்சிய ஆசிரியராகப் பணியாற்றி தன்னைப் போலவே 8000 ஆசிரியர்களை பாகிஸ்தானில் உருவாக்கி சாதித்தார். பரிசுத்தொகையை பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிட்டிருக்கிறார் சலீமா.