முத்தாரம் Mini



பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவை நாட்டில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளதே?  

ஜிஎஸ்டி மூலம் மோசடிகள் குறைக்கப்பட்டு அரசுக்கு அதிக வருமானம் கிடைத்துள்ளது. கருப்புப்பணம் மெல்ல குறையத்தொடங்கியுள்ளதோடு  வெளிநாடுகளுக்கும் பணம் செல்வதில்லை. கிடைத்த வரி வருவாய் மக்களின் மேம்பாட்டிற்காக செலவிடப்படும்.
 
ஆனால் ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் பண இருப்பு அதிகரித்துள்ளது…
சட்டபூர்வமான முறையில் சேமிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சியின் அடையாளம் அது.
 
சாலைப் பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டுகிறீர்களே?   

ஆண்டுதோறும் நிகழ்ந்த 5 லட்சம் சாலை விபத்துகளில் 1.5 லட்சம்பேர் இறந்துள்ளனர். இவர்களைக்  காப்பாற்றக்கொண்டுவந்த வாகனச்சட்டம் இன்னும் நிறைவேறவில்லை. போலி லைசென்ஸ்களின் அளவை 30 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைத்துள்ளேன்.
 
உங்களுடைய பணி திருப்தியளிக்கிறதா?
 
இல்லை. வருமானத்தை 25 லட்சம் கோடியாக அதிகரிக்க முயற்சித்து வருகிறேன். பாரத்மாலா (7.5 லட்சம் கோடி), சாகர்மாலா (16 லட்சம் கோடி) திட்டங்கள் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பும் நாட்டிற்கு வள்ர்ச்சியும் கிடைக்கும்.

-நிதின் கட்கரி, மத்திய போக்கு வரத்துத்துறை அமைச்சர்.