வட இந்தியாவின் ஆக்கிரமிப்பு!
வட இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப சமூக நலத்திட்டங்கள் இல்லாத காரணத்தால் தொழிலாளர்களின் பார்வை தென் மாநிலங்களை நோக்கித் திரும்பியுள்ளது.
பீகார், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் மக்கள்தொகைக்கும் வளர்ச்சிக்கும் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் பல்வேறு வேலைவாய்ப்புகளை வட இந்தியர்கள் கைப்பற்றி வருகின்றனர்.
சாலைவசதி, கல்வி, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை வட இந்தியர்கள் வாழ்வதற்காக தென் மாநிலங்களை தேர்ந்தெடுக்க முக்கியக் காரணங்களாக உள்ளன.
கேரள மாநில குடிமகன்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளில்களின் பணிபுரிந்து பணம் அனுப்பி தங்கள் கனவு வீட்டை கட்டுவது வழக்கம். இதன் காரணமாக கட்டுமானத்தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட கிராக்கி உ.பி, பீகார், மேற்கு வங்கத்திலிருந்து வரும் வட இந்தியத் தொழி லாளர்களின் வாழ்வை கரை சேர்த்துள்ளது.
இடம் பெயர்வு
1991 2011 ஆந்திரா - 3,66,000 31,20,000 கர்நாடகா - 2,70,000 20,3,000 தமிழ்நாடு - 1,35,000 3,93,000
கேரளா - 19,956 1,928
(Census 2011 தகவல்படி)
|