பட்டாம்பூச்சி காகிதம்



கவிதைக்காரர்கள் வீதி<br><div align="justify"><br><img src="http://kungumam.co.in/kungumam_images/2013/20131209/3.jpg"><br><br>உன் பெயர் கிறுக்கிய<br>மக்கிப் போன<br>ஒரு காகிதத்திலிருந்து <br>பட்டாம் பூச்சி ஒன்று<br>சிறகு விரித்துப் பறக்கிறது.<br>அகவி இறகு உதிர்த்துப்<br>போகிறது ஒரு மயில்.<br>துள்ளி நீந்திப் போகிறது<br>ஒரு கெண்டை மீன்.<br>மெல்லிதழ் மலர்த்துகிறது<br>ஒரு நீல நிற வாசப் பூ.<br>மருண்டு தலை தூக்குகிறது<br>மிரள் விழி மானொன்று.<br>குக்கூ குக்கூ எனப் பாடுகிறது<br>ஒரு மாந்தோப்புக் குயில்.<br>முத்தமிட்டு முயங்கச் செய்கிறது<br>ஒரு நிசி நேரத்து மழை.<br>ஒரு மதியத்தில் சட்டென்று<br>வீசிப் போகிறது குளிர் காற்று.<br>மதில் நின்று நோட்டம்<br>விடுகிறது ஒரு கறுப்புப் பூனை.<br>மேகம் தழுவி உலவிக் களிக்கிறது<br>ஒரு கார்காலத்து முழு நிலா.<br>மஞ்சள் வெயில் குடை பிடிக்கிறது<br>ஒரு வியாழக்கிழமை சூரியன்.<br>வண்ணம் கொட்டி கை தட்டுகிறது<br>ஒரு அந்திப் பொழுதின் வானம்.<br>நட்சத்திரங்களைச் சிதற விடுகிறது<br>வன்பனி வாட்டிய ஒரு மார்கழி இரவு.<br>வானவில்லை நிமிர்த்திப் பார்க்கும் <br>ஒரு கோணல் மனசின் <br>நினைவுகளுக்குள்ளிருந்து<br>எட்டிப் பார்க்கிறது ஒரு நேசமுகம்.<br>துடி இதயம் ஒரு இடைக்கணத்தில் <br>அடங்கித் துடிக்க <br>உன் விரல் கோத்த<br>என் கை விரல்கள் <br>நடுங்கி நழுவவிட்டது<br>உன் பெயர் கிறுக்கிய <br>அந்த மக்கிப் போன காகிதத்தை...<br><br><div align="right"><font color="#FF0000">பி.ஜி.சரவணன்</font></div></div>