தத்துவம் மச்சி தத்துவம்





என்னதான் பெரிய மந்திரவாதியா இருந்தாலும், கோர்ட் கூண்டுல ஏறிட்டா ‘வாதி’ன்னுதான் சொல்வாங்க; ‘மந்திரவாதி’ன்னு சொல்ல மாட்டாங்க!
- மந்திரவாதிகளை கோர்ட் கூண்டில் ஏற்றிப் பார்க்க ஆசைப்படுவோர் சங்கம்
- அனார்கலி, தஞ்சாவூர்.


என்னதான் தேனை நீரில் கலந்து சாப்பிட்டாலும், அதைத் ‘தேனீர்’னு சொல்ல முடியாது.
- டீக்கடை பெஞ்சில் தத்துவம் தேடுவோர் சங்கம்
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

வாள் போர்ல வாளைப் பார்க்கலாம்; ஈட்டி போர்ல ஈட்டியைப் பார்க்கலாம்; ஆனா பனிப்போர்ல பனியைப் பார்க்க முடியுமா?
- எப்போதும் ஏதாவது ஒரு போரில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க விரும்புவோர் சங்கம்
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

‘‘கபாலிக்கு நாம ரொம்ப இடம் கொடுத்துட்டோம் ஏட்டய்யா...’’
‘‘ஏன்... என்ன செய்யறான்..?’’
‘‘போலீஸுக்கும் எனக்கும் ‘தொப்பை’தான் வித்தியாசம்னு சொல்லிக்கிட்டு திரியறான்..!’’
- எஸ்.சங்கர், திருப்பரங்குன்றம்.

‘‘எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் சண்டை வந்தா கோவிச்சிக்கிட்டு நான் பண்ண மொத்த சாப்பாட்டையும் எடுத்து ராப்பிச்சைக்கு போட்டுடுவாரு...’’
‘‘உங்க ரெண்டு பேரு சண்டைல பாவம் ராப்பிச்சையை ஏன் பழி வாங்கறீங்க..?’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘நீங்க எழுதின பாட்டு யாருக்குமே புரியலைன்னு சொல்றேன்... அதுக்கு சந்தோஷப்படுறீங்களே..?’’
‘‘ஈஸியா புரிஞ்சிருந்தா ஹிட் ஆகாதே...’’
- சிக்ஸ்முகம், கள்ளியம்புதூர்.

‘‘தலைவர் ஏன் டாக்டர் பட்டம் வாங்கின கையோட நேரா எதிர்க்கட்சி ஆபீஸுக்குப் போறாரு..?’’
‘‘இதயமே இல்லாத எதிர்க்கட்சிக்காரங்களுக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப் போறாராம்..!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.