கவிதைக்காரர்கள் வீதி
* நதியின் போக்கிலேயே சென்றால் கடலை அடைந்துவிடலாம்.
* வேண்டுதல் நிறைவேறும்போது கல் கடவுளாகிறது. * கடலில் கால் நனைக்கும்போது கவனமாய் இருங்கள் அலை வந்து குழிபறிக்கும்.
* வலியுறுத்தி திணிக்கப் பார்க்காதீர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டதற்கு இருக்கும் மதிப்பே வேறு.
* விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடையே அகந்தை செத்துப்போனது கண்விழித்ததும் ஓடிவந்து தோளில் அமர்ந்துகொள்கிறது.
* அலைக்கழிக்கும் காற்றுக்கு தலைவணங்கி நிற்கின்றன சருகுகள்.
* அந்தி வானத்தில் வெளிச்சம் ஓய்வெடுக்க இருள் எல்லோருடைய அந்தரங்கத்திலும் எட்டிப் பார்க்கிறது
* நெருப்பைக் கண்டுபிடிக்காத காலங்களில் மனிதனை மண்தான் தின்றிருக்கும்.
* பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து சென்றால் அதன் குதூகலத்திற்கு காரணம் கண்டறிய முடியாதா?
* எதிர்ப்படும் மனிதர்களிடம் விலங்குகளைக் கண்டால் கூண்டுக்குள் பதுங்கிக்கொள்ளுங்கள்.
-ப.மதியழகன், மன்னார்குடி.
|