மனவடி ரகசியம் காண நீராடு



காலதேவன் கடமை
கை மீறிப்போச்சு!
கலிகால கேடு என
மக்கள் பேச்சாச்சு!
கடவுளை வணங்குதலே
பரிகாரமாச்சு!

நினைத்தபோது
கிடைக்கும் இன்பம்
வாழ்க்கையாச்சு!
நிலைத்த வாழ்வு
பெருமையெலாம்
ஏட்டில் பாடமாகிபோச்சு!

கோரிக்கை மனதில் வளர
கோவில் காணிக்கை
பெருகிபோச்சு!
கோவில் மனம்
எண்ணம் இறைவனெனும்
கொள்கை மறந்துபோச்சு!

நாடும் பொருள் சேர்ந்து
நல்வாழ்வு வாழலாச்சு!
நலிந்தோர்க்கு
இரங்காத மனம்
நாலுதிசை  பயணமாச்சு!

மட்டற்ற மகிழ்ச்சி தேடி
மனக்கட்டுப்பாடு இழந்தாச்சு!
மாற்றம் இயல்பென
மனஆறுதல் வளர்த்தாச்சு!

செய்த பாவம் செய்யும் பாவம்
தொலைந்திட நீராடு!
மாசிமகம் ஆற்றுப்படுத்தும்
மகாதேவனை  நினைந்து நீராடு!

பொய்மை நீங்க நீராடு
உண்மைதீ நீருபூக்க நீராடு!
கடலடி புகுந்து நீராடு!
மனவடி ரகசியம்காண நீராடு!

கண்ணீர் கதையெழுதும்
மனக்கவலை தீர நீராடு!
மாவிலை தோரணம் மங்களம்
வீடுதேடி வரும் நீராடு!

மஞ்சள் குங்குமம் விருப்பம்
மடி சேர்ந்திட நீராடு!
மலர்முக வாட்டம் நீங்கி
மகிழ்ச்சி மலர நீராடு!

நமச்சிவாய என்று நீராடு!
நாராயணா என்று நீராடு!
தெய்வசக்தி நீரில் கலந்து
தேகநலம் பெறும் நீராடு!

கோணல் மனம் நேராக
கும்பேஸ்வரர் அருள நீராடு!
மகத்துவம் நிறை மாசிமகத்தில்
குளத்தில் மூழ்கி நீராடு!

விஷ்ணுதாசன்