காஜலை கவர்ந்த ரூமி!



படப்பிடிப்பு இடைவேளைகளில் புத்தகம் வாசிப்பது நடிகைகளுக்கு வழக்கம்தான். காஜல் அகர்வால் சமீபத்தில், 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் ரூமியின் கவிதைகளைப் படித்து கிறங்கிவிட்டாராம்.

ரூமியின் வரிகளில் தன்னைக் கவர்ந்த வரி இதுதானென்று சமீபத்தில் சொன்னார். “நான் என்பது என்னுடைய அழகிய கூந்தலும், பளபளப்பான தோலுமல்ல. இந்தக் கூட்டுக்குள் வாழும் என்னுடைய ஆன்மாதான் நான்.”

- பாரதிராஜா