தன்ஷிகாவுக்காக காத்திருக்கும் சமுத்திரக்கனி!



இயக்குனர் கம் நடிகரான சமுத்திரக்கனி, இப்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். புதிதாக அவர் தொடங்கியுள்ள நிறுவனத்துக்கு ‘நாடோடிகள்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். “நானும், சசிகுமாரும் இணைந்து பணியாற்றிய ‘நாடோடிகள்’ படம் மிகப் பெரிய ஹிட்டானது. எனவே, என் நிறுவனத்துக்கு ‘நாடோடிகள்’ என்று பெயரிட்டு, விரைவில் படம் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். புதுப்படங்களில் நடிப்பதை கொஞ்ச காலத்துக்கு நிறுத்திவிட்டு, மீண்டும் படம் இயக்க முனைப்போடு தயார் ஆகிறேன்.



‘கிட்ணா’ படத்தை இயக்கி நடிக்கிறேன். ஹீரோயின் தன்ஷிகா, இப்போது ‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ‘கபாலி’ ஷூட்டிங்கை முடித்துவிட்டு வந்த பிறகு ‘கிட்ணா’வை தொடங்குவேன். இதற்கிடையே, ஏற்கனவே நான் நடித்து வெளியான ‘சாட்டை’ படத்தின் 2ம் பாகமாக உருவாகும் ‘அப்பா’ என்கிற படத்தில் நடிக்கிறேன். இது தந்தை - மகன் பாசத்தைப் பற்றிய கதை” என்கிறார் சமுத்திரக்கனி. திறமையுள்ள புதுமுகங்களுக்கு தன் நிறுவனம் வாய்ப்பு கொடுக்கும் என்றும் உறுதி கொடுக்கிறார்.

- தேவராஜ்