கிளாமர் தூக்கலான நரபலி கதை!



சினிமாக்காரர்களுக்கே உரிய நியூமராலஜி நம்பிக்கையில் சமீபத்தில் பெயர் மாற்றம் செய்திருப்பவர் பிரியங்கா. இப்போது அச்சிதா என்கிற புதிய பெயருடன் இவர் நடிக்கும் படம் ‘வச்சிக்கவா’. இதன் நாயகன் மாணிக்கவேல். இருவரும் கவர்ச்சி நடிகைகளே மிரளும் வகையில் கிளாமர் காட்சிகளில் தூக்கலாக நடித்திருக்கிறார்களாம்.

இயக்கம்: ஏ.ஆர்.ரபி. சாமியார்கள் குழந்தைகளை நரபலி கொடுத்த சம்பவங்கள்தான் படத்தின் மையக்கரு. நரபலி சாமியாராக தயாரிப்பாளர் ராஜா அம்மையப்பன் நடிக்கிறார். “பிரியங்கா என்கிற பெயரில் நிறைய பேர் இருப்பதாலும், பெயர் குழப்பத்தை தவிர்க்கவும்தான் என்னுடைய பெயரை அச்சிதா என்று மாற்றினேன்.  இதில் வழக்கமான ஹீரோயின் ரோலை விட என்னுடைய ரோல் பவர்ஃபுல்லாக இருக்கும்” என்கிறார் அச்சிதா.

- எஸ்