வெண்திரையில் கறுப்புப்பணம்!



கறுப்புப் பணத்தில் படம் எடுப்பதை, சமூக அக்கறையோடு எதிர்க்கிறார் ஒரு சினிமா இயக்குநர். ஆனால், காலத்தின் கட்டாயம் அவரை, அந்த கறுப்புப்பண கும்பலுக்கே படம் இயக்க வைக்கிறது. வாழு அல்லது வாழவிடு பாணியில் இறங்கி சினிமாவில் வெற்றி பெறும் இயக்குநர், சொந்த வாழ்வில் என்ன ஆனார் என்பதைச் சொல்கிற படம் ‘இயக்குநர்’. ஜெயலக்ஷ்மி ஜூப்ளி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு சங்கர்-கணேஷ் இசையமைக்கிறார்.

வட இந்தியாவிலிருந்து 3, தென்னிந்தியாவிலிருந்து 5 என 8 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ளார் ரஜத். மலேசியா, தாய்லாந்து மற்றும் ஊட்டி, மும்பை, டெல்லி, இமயமலைப்பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்கிறது.