தோழியருக்கான நட்சத்திர பலன்கள்-டிசம்பர் 16 முதல் 31 வரை



பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர்

அஸ்வினி: எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து முடிக்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மனவருத்தம் நீங்கும். 2ல் ராகு - 8ல் செவ்வாய், கேது - 9ல் சூர்யன், புதன் - 10ல் சுக்ரன், சனி - 11ல் குரு என கிரகநிலை அமைந்திருக்கிறது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மை தரும். ஆதிபராசக்தி அன்னையை தரிசித்து வருவது உடல் ஆரோக்கியத்தை தரும்.

பரணி: இயல்பிலேயே மற்றவர்களை கவர்ந்திழுப்பதில் திறமை உடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பணத்தேவை பூர்த்தியாகும். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. 2ல் ராகு - 8ல் செவ்வாய், கேது - 9ல் சூர்யன், புதன் - 10ல் சுக்ரன், சனி - 11ல் குரு என கிரக சூழல் இருக்கிறது. ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகி விடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். திருப்பாவை சொல்லி தாயாரை வணங்கி வர துன்பங்கள் விலகும்.

கிருத்திகை: சுத்தம், சுகாதாரம் சுகமான வாழ்க்கை என்பதில் கவனமாக இருக்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் - பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் -மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். லட்சுமி நரசிம்ம பெருமாளை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும்.

ரோகிணி: பிரச்சனையை சமாளிக்கும் திறமை பெற்ற உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். 1ல் ராகு - 7ல் செவ்வாய், கேது - 8ல் சூர்யன், புதன் - 9ல் சுக்ரன், சனி - 10ல் குரு என கிரகங்கள் வலம் வருகிறார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன்-மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.  எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். குல தெய்வத்தை வணங்க குடும்ப பிரச்சனை விலகும்.

மிருகசீரிஷம்: எந்த காரியத்திலும் வேகத்தைக் காட்டி காலத்தில் முடிக்கும் உங்களுக்கு தெய்வீக ஈடுபாடு இருக்கும். இந்த காலகட்டத்தில் நட்சத்திராதிபதி செவ்வாய் ஆட்சி பெறுவதன் மூலம் நல்ல பலன்கள் உண்டாகும்.  உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்து பிரச்சனையில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன்-மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தியாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

திருவாதிரை: எதிலும் ஈடுபடும் முன் ஆராய்ந்து பின்னர் செய்யும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் வீண் அலைச்சல் குறையும். 6ல் செவ்வாய், கேது - 7ல் சூர்யன், புதன் - 8ல் சுக்ரன், சனி - 9ல் குரு - 12ல் ராகு என கிரகநிலை இருக்கிறது. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம். பணவரத்து திருப்தி தரும். நவகிரகத்தில் ராகுவிற்கு நாகபுஷ்ப மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

புனர்பூசம்: உழைப்புக்கு அஞ்சாத நீங்கள் நேர்மைக்காக பாடுபடுவீர்கள். இந்த காலகட்டத்தில் பணவரத்து சீராக இருக்கும். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம். வீண் அலைச்சல் அதிகரிக்கும். விநாயகப் பெருமானை வணங்கி வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும்.

பூசம்: யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக செயலாற்றும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். 5ல் செவ்வாய், கேது - 6ல் சூர்யன், புதன் - 7ல் சுக்ரன், சனி - 8ல் குரு - 11ல் ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். ஆஞ்சநேயரை வணங்கி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

ஆயில்யம்: மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிக்கும் குணம் உடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மன சஞ்சலம் நீங்கும்.5ல் செவ்வாய், கேது - 6ல் சூர்யன், புதன் - 7ல் சுக்ரன், சனி - 8ல் குரு - 11ல் ராகு என கிரகங்கள் நிலை இருக்கிறது. மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். எடுத்த வேலை நல்லபடியாக முடியும். நாகதேவதையை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும்.

மகம்: எதையும் சமாளித்து முன்னுக்கு வரும் திறன் கொண்ட உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். 4ல் செவ்வாய், கேது - 5ல் சூர்யன், புதன் - 6ல் சுக்ரன், சனி - 7ல் குரு - 10ல் ராகு என கிரகங்கள் நிலை இருக்கிறது. அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்படும். குடும்ப செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். விநாயகரை வணங்க பிரச்சனைகள் குறையும்.

பூரம்: எதையும் திட்டமிட்டு செய்து முடிக்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். 4ல் செவ்வாய், கேது - 5ல் சூர்யன், புதன் - 6ல் சுக்ரன், சனி - 7ல் குரு - 10ல் ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது. குடும்பத்தில் கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத்தட்டுப்பாடு நீங்கும்.

உத்திரம்: அனுபவத்தையும், திறமையையும் கொண்டு காரியங்களை திறம்பட செய்யும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். முதலீடுகளில் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். நவகிரகத்தில் சூரியனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அஸ்தம்: எதையும் ஆழமாக யோசித்து திறமையுடன் செய்து முடிக்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். 3ல் செவ்வாய், கேது - 4ல் சூர்யன், புதன் - 5ல் சுக்ரன், சனி - 6ல் குரு - 9ல் ராகு என கிரகங்கள் இருக்கிறார்கள்.சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும்.  நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். பெருமாளுக்கு விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும்.

சித்திரை: எடுத்த கொள்கையில் மாறாதவர்களான உங்களுக்கு இந்த காலகட்டத்தில் வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். நட்சத்திராதிபதி செவ்வாய் ஆட்சி பெறுவதன் மூலம் எண்ணிய காரியம் கைகூடும். குறிக்கோள் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். அடுத்தவரை பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். எண்ணிய காரியம் கை கூடும். சிக்கலான பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும். குலதெய்வத்தை வணங்க பிரச்சனைகள் குறையும்.

சுவாதி: வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்களை அனுபவமாக எடுத்துக் கொள்ளும் திறமை உடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். 2ல் செவ்வாய், கேது - 3ல் சூர்யன், புதன் - 4ல் சுக்ரன், சனி - 5ல் குரு - 8ல் ராகு என கிரகங்கள் நிலை இருக்கிறது. தொல்லைகள் தீரும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து தாமதப்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பெருமாளை வணங்க மனத்தெளிவு உண்டாகும்.

விசாகம்: வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடவும் தயங்காத உங்களுக்கு இந்த காலகட்டத்தில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பணம் வரும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டு பேசி செய்வது நல்லது. குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிலும் வெற்றி காண்பீர்கள். குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அர்ப்பணித்து வணங்கி வர செல்வம் சேரும்.

அனுஷம்: விறுவிறுப்பாக எதையும் செய்யும் திறன் படைத்த உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும். ராசியில் இருக்கும் ராசிநாதன் செவ்வாயின்  சஞ்சாரம் மனோ தைரியத்தை தரும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் நீங்கும். நவகிரகங்களை வணங்கி வர பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும்.

கேட்டை: திறமையையே மூலதனமாக வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்லும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். நட்சத்திராதிபதி புதனின் சார பலம் பலவித நற்பலன்களை அளிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும். நவகிரகத்தில் புதனை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும்.

மூலம்: பக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தியடையச் செய்யும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். 1ல் சூர்யன், புதன் - 2ல் சுக்ரன், சனி - 3ல் குரு - 6ல் ராகு - 12ல் செவ்வாய், கேது என கிரகங்கள் நிலை இருக்கிறது. குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. தொல்லைகள் குறையும். பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும்.

பூராடம்: எதையும் சாதிக்கும் திறன் உடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். 1ல் சூர்யன், புதன் - 2ல் சுக்ரன், சனி - 3ல் குரு - 6ல் ராகு - 12ல் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகிறார்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். ஆஞ்சநேயரை வணங்க மன குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும்.

உத்திராடம்: எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் எதிலும் வெற்றி பெறும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்-மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்ற செல்வம் சேரும்.

திருவோணம்:  சாமர்த்தியமாக செயலாற்ற தெரிந்த உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மனதில் நம்பிக்கை உண்டாகும். 1ல் சுக்ரன், சனி - 2ல் குரு - 5ல் ராகு - 11ல் செவ்வாய், கேது - 12ல் சூர்யன், புதன் என கிரகங்கள் நிலை இருக்கிறது. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும். சனியின் சஞ்சாரம் எதிர்ப்புகளை விலக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன்-மனைவிக்கிடையே மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும்.  பெருமாளை வணங்க வாழ்க்கை வளம்பெறும்.

அவிட்டம்: விடா முயற்சியுடன் செயல்படும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலத்தை தரும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்து சேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும். வெளிக்காட்ட மாட்டீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். மனோ தைரியம் கூடும். மாரியம்மனை வணங்க குழப்பங்கள் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.

சதயம்: சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. 1ல் குரு - 4ல் ராகு - 10ல் செவ்வாய், கேது - 11ல் சூர்யன், புதன் - 12ல் சுக்ரன், சனி என கிரகங்கள் வலம் வருகின்றனர். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் -மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். காவல் தெய்வத்தை வணங்க வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

பூரட்டாதி: தைரியமாக எதிலும் செயல்படும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பணவரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு ஏற்படலாம்.  மனக்கவலை அகலும். மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது நல்லது. பணவரவில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். பிரச்சனைகள் தீரும்.

உத்திரட்டாதி: எந்த சூழ்நிலையிலும் சுயகவுரவத்தை விட்டுக் கொடுக்காமல் செயல்படும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மனோ தைரியம் உண்டாகும். 3ல் ராகு - 9ல் செவ்வாய், கேது - 10ல் சூர்யன், புதன் - 11ல் சுக்ரன், சனி - 12ல் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. மனதில் இருந்த கவலை, வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க செய்யும். பணவரத்து அதிகரிக்கும். பயணத்தின் போது கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கணவன் -மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சிவனை வணங்க எதிர்ப்புகள் விலகும்.

ரேவதி: அனுபவ அறிவைக் கொண்டு காரியங்களை திறம்பட செய்யும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிலும் சாதகமான போக்கு காணப்படும். 3ல் ராகு - 9ல் செவ்வாய், கேது - 10ல் சூர்யன், புதன் - 11ல் சுக்ரன், சனி - 12ல் குரு என கிரகங்கள் இருக்கிறார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.  பெருமாளையும் தாயாரையும் வணங்கி வர சுகம், சௌக்கியம் உண்டாகும்.