உண்ணாவிரதம் இருப்பது உடல்நலத்திற்கு நல்லதா?



ஏன்? எதற்கு? எப்படி?

அகோர பசி உடலில் அடங்கு வதற்கு காரணம்,  உணவுப்பொருட்களிலிருந்து கிடைக்கும் குளுக்கோஸ். உண்ணாவிரதம் இருக்கும்போது உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பு உடலின் பசியைக் குறைத்து உடல்  இயங்குவதற்கு  உதவுகிறது.  உண்ணாவிரதம் இருக்கும்போது பசி மெல்லிய கோடாக தோன்றக்காரணம், கொழுப்பில் இருந்து கிடைக்கும் கீட்டோன் என்ற பொருள்.

எடைக்குறைப்புக்கு உண்ணாவிரதம் உதவும் எனக் கூறினாலும் மருத்துவரின் பரிந்துரைப்படி நான்கு நாட்கள் முழுமையாக மாவுச்சத்துப்பொருட்களே சாப்பிடாமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகரிப்பதாகவும், மார்பகப் புற்றுநோயை ஊக்குவிக்கும் காரணிகள் குறைவதாகவும் மருத்துவர்கள் டிம் ஸ்பெக்டர், மிட்செல் ஹார்வி ஆகியோர் ஆய்வுகளின் அடிப்படையில்
தகவல் தெரிவிக்கின்றனர்.

Mr.ரோனி