பூமிக்கடியில் எவ்வளவு வெட்டினால் எவ்வளவு வைரம் பெற முடியும்?
கே.வீணா,
10ம் வகுப்பு,
கே.ஆர்.மேல்நிலைப்பள்ளி,
சிவகங்கை.
பூமிக்கு அடியே, எளிதாக வெட்டியெடுக்கும்படி ஏராளமான நிலக்கரி பாளம் பாளமாக இருக்கிறது. அதை வெளியே எடுத்து வந்து தேவையான அளவுகளில், வடிவங்களில் வெட்டிக் கொள்ள முடியும். ஆனால், வைரத்தை அவ்வளவு ஈசியாக துண்டு போட முடியுமோ? ம்ஹூம்! வைரம்தான் இருப்பதிலேயே மிகமிகக் கடினமான பொருள். ரூபி, சபையர், எமரால்ட் கற்களைப் போல வைரமும் மண்ணுக்குள் இருக்கும்போது அவ்வளவு சுவாரஸ்யமானதல்ல. ஆனால், முறையாக வெட்டியெடுக்கப்பட்ட பிறகு என்ன அழகு... எத்தனை அழகு! ஒவ்வொரு பக்கமும் சரியான கோண அளவுகளில் வெட்டப் படுவதால், ஒளியை உள்வாங்கி எதிரொளித்து மகாராணி போல மினுக்கிக் கொள்கிறது.
தென் ஆப்ரிக்காவிலுள்ள கிம்பர்லைட் சுரங்கம்தான் வைரம் விளையும் பூமி. அங்கே யும் 500 டன் மூலப்பொருளை வெட்டியெடுத்து, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்தால் கூட 30 கிராம் வைரம்தான் கைக்கு வரும்!
எந்தக் காலகட்டத்தில் அதிக அளவு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன?
எம்.குமார்,
11ம் வகுப்பு,
சேதுபதி மேல்நிலைப்பள்ளி,
மதுரை.
வாழ்க்கைச் சாலையைப் போலவே கண்டுபிடிப்புகளிலும் ஏற்ற இறக்கங்கள் உண்டு. கி.மு. 5000&க்கும் கி.மு. 2500&க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏகப்பட்ட கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அதன்பிறகு கொஞ்சம் சுணக்கம். வேலைகளைச் செய்வதற்கு அடிமைகள் பயன்பட்டதால் புதிய கண்டுபிடிப்புகளின் தேவை யில்லாமலே சொகுசு வாழ்க் கைக்குப் பழகிப் போன சிலரால் இந்த நிலை ஏற்பட்டது என்று வர லாற்று அறிஞர்கள் கருதுகிறார் கள். மாவு அரைக்கவும், துணி துவைக்க வும், ஏவிய வேலைகளைப் பணிவுடன் செய்து முடிக்க வும் அடிமைகள் இருக்கிறார் களே... எதற்காக அவர்களின் வேலையைச் சுலபமாக்கும் சாதனங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு...
200 ஆண்டுகளுக்கு முன்தான் கண்டுபிடிப்புகள் துறையில் அதிவேகம் ஏற்பட்டது. அந்த வேகம் இன்றும் குறையவில்லை. அதில் பல, ப்ளக்கில் செருகினாலோ, பட்டன் தட்டினாலோ வேலை செய்யக்கூடியவை. காரணம், மின்சக்தியால் இயங்கும் மோட்டார்களும் என்ஜின்களும் கண்டறியப்பட்டதுதான். மின்சாரத்தை, தயாரான இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு அனுப்பிப் பயன்படுத்த வழி செய்ததும் பல கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்தது. அதற்கு முன் காற்றாலையோ, நீர் ஊற்றுகள் மற்றும் அருவி மூலம் செயல்படும் நீர் மின் நிலையமோ அமைந்திருக்கும் இடத்துக்கு அருகில்தான் மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. 1769&ல் நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே ஏகப்பட்ட மாற்றங்கள். எங்கு வேண்டுமானாலும் நீரைக் கொதிக்கச் செய்து நீராவி என்ஜினை இயக்க முடியும் என்ற நிலை உருவானது (ஆனால், நீராவி என்ஜின்கள் அளவில் பெரியதாக இருந்ததால் கார்களிலும், விமானங்களிலும் பயன்படுத்தப் படவில்லை). புதிய ஆற்றல் மூலங்கள் கண்டறியப்படும் போது புதிய கண்டு பிடிப்புகளும் தோன்று கின்றன.