வெள்ளைப் பூசணியின் மருத்துவ குணங்கள்!
வெள்ளைப் பூசணியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும், இது வயிற்றுப் புண், காய்ச்சல், சளி மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை போன்ற பிரச்னைகளை தீர்க்க உதவும்.
 வெள்ளைப் பூசணியின் மருத்துவ குணங்கள்
நோய்எதிர்ப்பு சக்தி: வைட்டமின் சி இருப்பதால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
செரிமான ஆரோக்கியம்: வயிற்றில் உள்ள புண்களை ஆற்ற உதவுகிறது. மேலும், செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து இதில் நிறைந்துள்ளது.
இதய ஆரோக்கியம்: நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன.காய்ச்சல் மற்றும் சளி: காய்ச்சல் மற்றும் சளியைக் குணப்படுத்த உதவுகிறது.
எலக்ட்ரோலைட் சமநிலை: உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக்கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும்.
இரத்த சுத்தி: ரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
ஆற்றல் அளவை அதிகரிக்கிறது: ஆற்றல் மட்டங்களை அதிகரிக்க உதவுகிறது.
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.
காலையில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.
பெண்களின் வெள்ளைப்போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்.
கொடிய நோய்களுக்கு மருந்து
வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப் புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும்.
எலும்புருக்கி முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்.சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.
- ஸ்ரீ
|