ADHD முழுமையான புரிதலும், சிகிச்சை முறைகளும்
அகமெனும் அட்சயப் பாத்திரம்
முதன் முதலாக 1798 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் அலெக்ஸாண்டர் கிரிச்டன் கவனக் குவிப்பில் ஏற்படும் பிரச்சனைகளை தன்னுடைய நூலில் குறிப்பிட்டார். மனநிலையில் ஏற்படும் வரிசைக் கட்டமைப்பில் மாறுபாடு (DeArrangement) காரணமாக எழுந்துள்ள சிறு பாதிப்புதான் ADHD எனப்படும் Attention deficit hyperactivity disorder என்று அவர் குறிப்பிட்டார்.

வரலாற்று காலகட்டத்தில் இயல்பாகவே கவனக்குவிப்பில் குறிப்பிட்ட விஷயத்தில் முழுமையாக ஈடுபடுவதில் சிக்கல் ஏற்படும் நபர்களை அவர் இனம் கண்டறிந்து உலகிற்கு உணர்த்தினார். அதன் பின்னர் 1902-ல் ஜார்ஜ் ப்ரெட்ரிக் ஸ்டில் எனும் ஆங்கிலேய குழந்தை மருத்துவ நிபுணர் ADHD சார்ந்த விரிவான கண்டுபிடிப்புகள் பலவற்றை நிகழ்த்தினார். ‘‘குழந்தைகளின் நடத்தைக் கட்டுப்பாட்டில் ஏற்பட்டுள்ள வழக்கத்திற்கு மாறான குறை” என்பது அவர் வகுத்த வரைவிலக்கணம் ஆகும்.
இதுவே இன்றளவும் உலக மருத்துவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், ADHD- ஐ சரியாகப் புரிந்து கொள்வதற்கான எளிய குறிப்பாகவும் இருக்கிறது. எனவே, இன்றைய நவீன உளவியல் மூளையின் செயல்திறன் குறைபாட்டினை சவாலாக எடுத்துக் கொண்டு நல்ல பாதையை வகுத்து வருகிறது என்று உறுதியாக சொல்லமுடியும். அதற்கு சாட்சியாக சிறப்பு பயிற்சி மையங்களும், சிறப்புப் பள்ளிகளும் நம் அருகில் வந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
அமெரிக்க மனநல சங்கம் ADHD என்பது ‘‘மூளையின் செயல்களை கட்டுப்படுத்தும் நரம்பியல் குறைபாடு” என்று கூறியுள்ளது. காலை முதல் இரவு வரை சோர்வடையாமல் புத்துணர்ச்சியோடு இருக்கும் குழந்தைகளை கவனிக்க முடியாமல் பெற்றோர்கள் சோர்வடைந்துவிடுவார்கள்.
கட்டுப்படுத்த முடியாத தொடர் இயக்கங்களால் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் செயல்படும் சில குழந்தைகள் ஏடிஎச்டி பாதிப்பு கொண்ட குழந்தைகள் கவனச்சிதறலை உரிய காலத்தில் சரிப்படுத்தாத போது கல்வியியல் பிரச்சனை ஏற்படும் என்பதை உணர வேண்டும். கவனச்சிதறல் அது இயக்கம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. சிலருக்கு ஏதேனும் ஒரு பாதிப்பு மட்டும் இருக்கக்கூடும். அவற்றைப் பிரித்தறிந்து தன்மைக்கேற்ப சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.மருத்துவர் சார்லஸ் ப்ராட்லி அவர்கள் பல ஆண்டுகள் மருத்துவ ஆராய்ச்சி புரிந்து சில பள்ளிக்குழந்தைகளுக்கான ADHD மருந்துகளை வழங்கினார். 1936 ஆம் ஆண்டு அவற்றை FDA அங்கீகரித்த அந்த மருந்துகள் நல்ல சில பலன்களைக் கொடுத்தபோதும் சில நேரங்களில் பின்விளைவுகளைக் கொடுப்பதாக எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன.
ஆனால் மூளையின் செயல்பாடுகளை சமநிலையில் வைத்திருக்கக் கூடிய நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்ஸ் எனப்படும் அந்த வேதிம மருந்துககள் இன்றளவும் நல்ல நடத்தை மாற்றங்களை உடனடியாகக் கொடுப்பதால் உலகம் முழுவதும் பரிந்துரைக்கப்படுகின்றன.
எனவே, சிறு குழந்தைகள் இவ்வாறு மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது பக்கவிளைவுகள் குறித்து கவனம்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.மாற்று வழிகளாக மனநல ஆலோசனைகளும், மிதமான தெரப்பி முறைகளும் நிலையான பயனளிக்கக் கூடியவையாக இருக்கும். அன்றாட வாழ்க்கை முறைகளில் (Life style changes) சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது, ADHD குறைபாட்டினைத் தெளிவாகப் புரிந்து கொண்டு மாற்றங்களை நோக்கி நகர உதவும். முறையான உடற்பயிற்சி, சமச்சீரான உணவு, எட்டு மணி நேர உறக்கம், மன அழுத்த நிர்வாகம் (Stress Management) எனும் மன உளைச்சலுக்கான பயிற்சி முறைகள், Mindfulness எனப்படும் நிறைவு மனநிலை நோக்கிய பயிற்சிகள், நேர மேலாண்மை பயிற்சி மற்றும் சமூக இணக்கப் பயிற்சிகளும் (Socializing therphy ) மிகுந்த பயன் தரக்கூடியவை.
கூடுதலாக முறையான தொடர் உளவியல் சிகிச்சைகளாக CBT, PMR, Relaxation theraphy, Socializing therphy போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றோடு சமூக திறன் பயிற்சி (Social skills training), குடும்ப தெரப்பி (family therphy) போன்றவை இணைப் பயிற்சிகளாக வழங்கப்படும்போது வெகு விரைவில் மாற்றங்களை உணரலாம்.
கூடுதலாக தியான பயிற்சி முறைகள், அரோமா தெரப்பி, இசை தெரப்பி, நீர் தெரப்பி போன்ற மிதமான எளிய சிகிச்சை முறைகள் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கும் ADHD பாதிப்பை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும். எனவே, சிறு அளவில் இந்தக் கோளாறுகளின் தன்மைகள் வெளிப்படும் பொழுது நடைமுறை வாழ்வில் சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு சரி செய்ய முயற்சி மேற்கொள்வது புத்திசாலித்தனம்.
நேர்மறை உணர்வுகளைத் தோற்றுவிக்கக்கூடிய PMR (Progressive muscle relaxation therapy ) மற்றும் தியானம், யோகா பயிற்சிகள், தன்னை முழுமையாக உணரும் mindfullness நுட்பங்களும் உதவி புரியும். நல்ல பலன் அளிக்கக் கூடியது.
தான் மெல்ல மெல்ல அமைதியான மனநிலைக்குத் திரும்புகிறோம் என படிப்படியாக உணர்ந்து இயல்பாக ஆசுவாசம் அடைகிறோம் என்பதை பயனாளி உணரும் தளர்வாக்க தெரப்பி (Relaxation Therphy)-யும் நல்ல பலன் தரும். இந்தப் பயிற்சிகள் கூர்ந்த கவனிப்பை தோற்றுவிக்கும் போது மனநிறைவும், அமைதியும் ஏற்படுவது கண்கூடாகத் தெரியும்.
Manifestation - அதாவது தான் நல்ல நிலையில் இருப்பதாக எதிர்கால மனக் காட்சிகளை உருவாக்கிக் கொள்வது எதிர்மறை மனநிலையை மாற்றி எண்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். எதைச் செய்ய வேண்டும், வாழ்வில் எது முக்கியமானது, தன் தகுதி, என்ன திறமை எது என முழுமையாக உணரும் திறன் கூடும்.
அப்போது சுயக் கட்டுப்பாடும், நம்பிக்கையும் வலுவாகி அன்றாட செயல்களில் ஒழுங்குமுறை உருவாகும். எனவே உலகெங்கிலும் நேர்முக தெரப்பி (Positive therphy) பிரிவின் கீழ் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் அவர்கள் வலியுறுத்திய ‘கனவு காணுங்கள்’ எனும் கோட்பாடு உளவியல் மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டு நல்ல நடைமுறைப் பயன்களைக் கொடுத்துவருகின்றன என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். உளவியல் சிகிச்சையில் இடம் பெறும் ஆழமான மூச்சுப் பயிற்சி அலைவுறும் மனதை சமநிலைக்கு கொண்டு வந்து கவன குவிப்பை சீராக்கும். நல் உணர்வுகளை தோற்றுவிக்கும் மகிழ்ச்சியான உணர்வுகளை அதிகரிப்பதன் மூலமாக ADHD பாதிப்புக்கு உள்ளானவர்களின் கடந்த கால நிலையை மாற்றி அமைக்க நிச்சயம் முடியும் என்று உளவியல் வல்லுநர் பைரண்ட் எஃப்.பி. ஸ்மார்ட் தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
நடத்தைமுறை சிகிச்சைகள் (Behavioral Theraphy), பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்புப் பயிற்சிகள் போன்றவை இன்று பரவலாக அறியப்பட்டு விட்டன. படித்த பல பெற்றோர்கள் ADHD குறித்த விழிப்புணர்வோடு முறையான சிகிச்சைகளை மேற்கொள்ள முன்வரத் தொடங்கி விட்டார்கள் என்பது நல்ல சமூக மாற்றங்களுக்கு நிச்சயம் வழி வகுக்கும். எனவே ஆரோக்யமான மனநலம் கொண்ட எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதில் நாமும் நம் பங்களிப்பைச் செய்யத் துவங்குவோம்.
அறிவியல் உண்மைகளை பலரோடு பகிர்ந்து கொள்வதே அதற்கான முதல்படி.சில நேரங்களில் Extroversion எனப்படும் வெளிமுக சிந்தனைத் தன்மை அதிகரிக்கும்போது மிகை இயக்க நிலையாக உருவெடுக்கிறது என்று மருத்துவர் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் High Energy எனப்படும் பயன்படுத்தப்படாத அதீத சக்தியே மிகை இயக்கத்தின் முதல் காரணியாக இருக்கின்றது. அதேநேரம் Introvert எனப்படும் உள்முகச் சிந்தனையாளர்களிடம் டADHD தோன்றுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. மருத்துவ ஆய்வுகளின் முடிவுகள் Higher nerotism எனும் நரம்பியல் இயக்க மாறுபாடு காரணமாகவே ADHD பாதிப்பு உருவாகிறது என்றும் தெரிவிக்கின்றன. மேலும் பலரும் Dyslexia எனப்படும் கற்றல் கோளாறினை ADHD உடன் தொடர்புபடுத்தி குழப்பிக் கொள்கிறார்கள். அடிப்படைக் காரணிகளான கவனக்குறைவு, செயலாற்று திறன் குறைபாடு, கட்டுப்பாடற்ற அசைவுகள் போன்ற ஒற்றுமைகள் இருந்தாலும் DYSLEXIA SPELLING எழுத்துப் பிரச்சனைகள், கற்றல் குறைபாடுகள் போன்ற தீவிரமான பாதிப்புகளைக் கொண்டிருக்கும் எனவே இரண்டும் முற்றிலும் மாறுபட்டவை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ADHD குழந்தைகள் எங்கிருந்தோ இதனை கற்றுக் கொண்டவர்கள் என்று எண்ணி அவர்களை தண்டிப்பது அவர்களை மேலும் கடினமானவர்களாக, சமூகத்திற்கு எதிரானவர்களாகத் திருப்பி விடக் கூடும்.
வழக்கமான நடைமுறைகளைச் செயல்படுத்துவதில் சிரமம் கொண்டுள்ள அவர்களின் நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களாக விரும்பி அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. இது எளிய சிகிச்சையின் வழி சீராக்கப்பட வேண்டிய வேதிமக்கோளாறு எனும் மருத்துவ உண்மையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பசங்க 2 திரைப்படம் இதனைக் காட்சி மொழியாக உணர்த்தியதை இங்கே நினைவு கூறலாம். பிரபல நடிகர் பகத்ஃபாசில் அவர்கள் தன்னுடைய 41 வது வயதில் தனக்கு ஏடிஎச் டி பாதிப்பு உள்ளதாக வெளிப்படையாகக் கூறினார். அனைவரையும் ADHD குறித்து விரிவாக வெளிப்படையாகப் பேசி குறைபாடுகளை நீக்கிக் கொள்ள முன்வருவதே நல்லது” என்றும் அவர் கூறி தன்னுடைய பங்களிப்பை சமூக பங்களிப்பாக செய்துள்ளார் என்பதை இங்கே நினைவு கூறலாம்.
கவனச் சிதறலும் மிகை இயக்கமும் முறையாக கையாண்டால் பெரிய சாதனைகளை நிகழ்த்தக்கூடிய சக்திகளாக உருவெடுக்கும் என்பதை உணர்ந்து குறைகளை நிறைவாக்க உரிய உரிய நேரத்தில் சரியான முன்னெடுப்புகளை முன்னெடுப்புகளை எடுப்போம். நேர மேலாண்மையை உருவாக்கிக் கொள்வதும், நல்ல இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கி செயலாற்ற ஊக்கம் அளிப்பதும் கவனச் சிதறலை குறைத்து நேர்மறையான செயல்திறன் ஆற்றலை அதிகரிக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.
ADHD பாதிப்பு கொண்டவர்களுக்கு மட்டுமல்ல இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் அனைவருக்குமே தேவைப்படும் நேர திட்டமிடுதல் மற்றும் இலட்சிய வேட்கை கொள்வதோடு நின்று விடாமல் அவற்றை அடையும் வெற்றி வழிமுறைகளைக் குறித்தும் அடுத்த இதழில் விரிவாகக் காண்போம்.
மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்
|