ஜோக்கூ
‘‘பாங்க்ல கொள்ளையடிச்சதும் இல்லாம, கேஷியரையும் எதுக்காகக் கடத்திட்டுப் போனீங்க..?’’ ‘‘அத்தனை பணத்தையும் வேகமா எண்ண ஆள் வேணாமா எசமான்..?’’ - ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.
காமர்ஸ் தேர்வு எழுதியிருந்தேன். கணக்கில் பாஸ் என்று ரிசல்ட் வந்தது; ரிசல்ட் போடுபவரும் பக்கத்தில் அமர்ந்திருப்பவரைப் பார்த்து எழுதியிருப்பாரோ? - அ.ஜெயேந்திரன், தஞ்சாவூர்.
‘‘ஏன் கபாலி... ‘திருந்திட்டேன்’னு ஐயாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடேன். ஏன் வீணா அடி வாங்கி சாகறே?’’ ‘‘ஏட்டய்யா... அந்த ஒரு வார்த்தை சொன்னதுக்குத்தான் இம்புட்டு அடியும்!’’ - எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
என்னதான் டிசைன் எஞ்சினியரா இருந்தாலும், பத்திரத்தில ‘சைன்’தான் பண்ணணும்; ‘டிசைன்’ பண்ணக் கூடாது! - எஞ்சினியர்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை கொடுப்போர் சங்கம் - அனார்கலி, தஞ்சாவூர்.
‘‘எதுக்குதான் நில அபகரிப்பு வழக்கு போடறதுன்னு விவஸ்தையே இல்லாமப் போச்சு...’’ ‘‘என்னய்யா ஆச்சு..?’’ ‘‘இது என்னோட சொந்த ஊர்னு சொன்னதுக்கே, நம்ம தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம்..!’’ - ஜி.தாரணி, அரசரடி.
‘‘தொண்டை வலிக்கு நீங்க கொடுத்த மாத்திரையை எப்போ சாப்பிடணும் டாக்டர்..?’’ ‘‘மருமகளோட சண்டை போட ஆரம்பிக்கறதுக்கு முன்னால முழுங்கிடுங்க...’’ - என்.பர்வதவர்த்தினி, சென்னை-75.
தத்துவம் மச்சி தத்துவம்
என்னைப் பார் யோகம் வரும் - கழுதை பிகரைப் பார் சோகம் வரும் - கவிதை - சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.
|