சொல்லி அடித்த ஷேவக்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                 ‘ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் எடுப்பது என் ஆசை’ என சில நாட்களுக்கு முன்புதான் சொன்னார் ஷேவக். இந்தூர் மைதானத்தில் அதை நிகழ்த்திக் காட்டிவிட்டார். ஏற்கனவே இந்த மைல்கல்லைத் தொட்ட ஒரே வீரர் சச்சின். இதே மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மைதானத்தில் சச்சின் அந்த சாதனையை நிகழ்த்தியபோது, பெவிலியனில் அமர்ந்து கை தட்டினார் ஷேவக். இம்முறை ஷேவக் இரட்டைச் சதம் அடித்தபோது சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் போய்க்கொண்டிருந்தார். விஷயம் கேள்விப்பட்டதும் சச்சின் சந்தோஷத்தோடு சொன்னது... ‘‘என் சாதனையை என்னுடைய டீம்மேட், ஒரு இந்தியர் முறியடித்தது பெருமை!’’

சச்சினைப் பார்த்து கிரிக்கெட் ஆடவந்த ஷேவக், அவரது சாதனையைத் தாண்டி 219 ரன்கள் எடுத்திருக்கிறார். ‘‘45 ஓவர்கள் வரை என்னால் நின்று ஆட முடிந்தால் 220 ரன்களைக் கண்டிப்பாக எடுக்க முடியும் என்று நம்பினேன். அது நடந்திருக்கிறது’’ என்று சொல்லும் ஷேவக், எதிர்காலத்தில் இந்த மைல்கல்லைத் தொடுவார்கள் என்று கணிக்கும் இரண்டு வீரர்கள், ஷேன் வாட்சனும் கிறிஸ் கெய்லும்!
ரெமோ