இந்தியாவின் பணக்கார Chief Ministers!



வேலை மெனக்கெட்டு ரூம் போட்டு யோசித்து இப்படியொரு பட்டியலை ஏடிஆர் என்ற தன்​னார்வ தொண்டு அமைப்பு அண்​மை​யில் வெளியிட்டுள்ளது.இதன்படி முதலிடத்தில் - அதாவது இந்தியாவின் பணக்கார முதலமைச்சராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இடம்பெற்றிருக்கிறார். 
இவரது சொத்து மதிப்பு ரூ.931.83 கோடி!கடந்த 1992ம் ஆண்​டில் ‘ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட்’ என்ற நிறு​வனத்தை சந்திர​பாபு நாயுடு தொடங்கினார். இதற்காக அவர் முதலில் ரூ.7,000ஐ மட்​டுமே முதலீடு செய்தார். பின்னர் வங்கியில் ரூ.50 லட்சம் கடன் வாங்கி சித்தூரில் பால் பண்ணையை தொடங்கினார். அவரது மனைவி புவனேஸ்​வரி இதன் நிர்வாக இயக்​குன​ரானார்.

புவனேஸ்​வரி​யின் திறம்​பட்ட நிர்​வாகத்​தால் 2024ம் ஆண்டு புள்​ளி​விவரத்​தின்​படி ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட் நிறு​வனம் ரூ.6,755 கோடி சாம்​ராஜ்ஜிய​மாக உயர்ந்​திருக்​கிறது.
இந்த அடிப்படையில் ஆந்​திர முதல்​வர் சந்​திரபாபு நாயுடு பணக்கார சிஎம் ஆக முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து அருணாச்சல பிரதேச முதல்​வர் பெமா காண்டு ரூ.332.56 கோடியுடன் 2வது இடத்தில் உள்ளார்.

 கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா​ ரூ.51.93 கோடி, நாகாலாந்து முதல்​வர் நெய்​பியு ரியோ​ ரூ.46.95 கோடி, மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவிடம் ரூ.42.04 கோடி, புதுச்​சேரி முதல்வர் ரங்கசாமி​ ரூ.38.39 கோடி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் ரூ.30.04 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக ஏடிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்​கிறார். அவரிடம் ரூ.15 லட்சம்​ சொத்​துகள்​ மட்​டுமே உள்ளதாம்.

என்.ஆனந்தி