மச்சு பிச்சுவில் சக்கர நாற்காலி!



இணையவாசிகளின் ஏகோபித்த ஆதரவால் ‘உலகின் புதிய ஏழு அதிசயங்களி’ன் பட்டியலில் இடம்பெற்று மிளிர்கிறது மச்சு பிச்சு!பெரு நாட்டில் கடல் மட்டத்திலிருந்து 7970 அடி உயரத்தில் வீற்றிருக்கும் இந்த அற்புத நகர், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘இன்கா’ பேரரசின் கட்டடக்கலைக்குப் பெரும் சான்று. பளபளப்பான கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்நகரம் பல்வேறு இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி அமைதியாக நிற்கிறது.

இந்த கற்களையெல்லாம் எப்படி இவ்வளவு உயரத்துக்குக் கொண்டு வந்தார்கள் என்பது இன்றும் புரியாத புதிர். மாற்றுத் திறனாளிகள் செல்ல முடியாத ஓர் இடமாக  மச்சு பிச்சு இருந்து வந்தது. இப்போது உடல் ஊனமுற்றவர்களும் மச்சு பிச்சுவின் அழகை தரிசிக்க பிரத்யேகமான ஒரு சக்கர நாற்காலியை உருவாக்கியிருக்கிறார்கள். உலக சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டது அந்த சக்கர நாற்காலி.

த.சக்திவேல்