யோகா கண்காணிப்பு!
யோகா தினத்துக்கு ஆயுஷ் அமைச்சகத்திடமிருந்து இஸ்ரோ நிறுவனத்துக்கு புதுமையான கோரிக்கை வந்திருக்கிறது!
ஜூன் 21 அன்று உலக யோகா தினம். இதைச் சிறப்பிக்கும் வகையில் நாடெங்கும் யோகாவில் ஈடுபடுபவர்களை இஸ்ரோ சாட்டிலைட் மூலம் கண்காணிக்கவேண்டும் என்பதுதான் அந்த புத்தம் புது கோரிக்கை! ‘‘நாங்கள் இஸ்ரோ தலைவருக்கு எழுத்து வடிவில் கோரிக்கையை அனுப்பியுள்ளோம். இஸ்ரோ உதவினால் யோகா தினத்தில் காலை 7 முதல் 8 மணி வரை இதில் நாடு முழுவதும் பங்கேற்கும் அன்பர்களை பார்க்கமுடியும்.
இஸ்ரோ இன்னும் அதற்கான ஒப்புதலை வழங்கவில்லை...’’ என்கிறார் ஆயுஷ் அமைச்சக செயலரான ராஜேஷ் கோடெச்சா. டேராடூனின் வனத்துறை ஆராய்ச்சிக்கழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்று யோகாசனங்களை செய்யவிருக்கிறார். யோகா தினத்துக்கான பிரசாரங்களை ஆயுஷ் அமைச்சகம் சமூக வலைத்தளங்கள் வழியாக செய்யத் தொடங்கியிருக்கிறது.
ரோனி
|