பிப்ரவரி 16 முதல் 29 வரை ராசி பலன்கள் -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்



மேஷம்:
எதையும் துணிச்சலுடன் செய்யக் கூடிய மேஷ ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்னைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது  மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் நீங்கும்.  புதிய ஆர்டர்கள் கிடைப்பது துரிதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். வேலையை மனதிற்கு பிடித்து செய்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும் படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் மறையும். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். பெண்கள் எந்தக் காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் அகலும். அரசியல்துறையினருக்கு சுபச்செலவு  கூடும்.  மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களைப் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.பரிகாரம்: முருகப் பெருமானை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்:  ஞாயிறு, வெள்ளி.

ரிஷபம்:
அடுத்தவர்களின் எண்ணங்களைக்கேட்டு காரியங்களை வெற்றிகரமாக நகர்த்தும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு லாபஸ்தானத்தில் உச்சமாக இருப்பது சிறப்பு. திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழிவர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தொழில் வியாபாரம் நன்றாக  நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள்  வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள்.  எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான  சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளைத்  தொடங்க முற்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு  தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.
பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.
பரிகாரம்: குரு பகவானை முல்லை மலரால் அர்ச்சனை செய்து வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு  உயரும்.  மன மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:  திங்கள், வெள்ளி.

மிதுனம்:
நம்பிவருபவர்களுக்கு உதவும் குணம் உடைய மிதுன ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார்.  வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். மனதில் இருந்த கவலை அகலும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபச்செலவு ஏற்படும். கூட்டுத் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமுகமான முறையில் அனுசரித்துச்செல்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  பயணங்கள்
உண்டாகலாம்.  

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாகப் பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை  ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான  விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.  வாக்கு வாதத்தைத்  தவிர்ப்பது நல்லது. பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். அரசியல்துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம்.
பரிகாரம்: தீபம் ஏற்றி விநாயகப் பெருமானை வழிபட காரிய வெற்றி உண்டாகும். குடும்பக் கவலைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி.

கடகம்:
உடல் உழைப்பும் மன தைரியமும் உள்ள கடக ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் இருக்கிறார். ராசியை செவ்வாய் எட்டாம் பார்வையாய் பார்க்கிறார். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். நல்ல பலன்களையே தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும் சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.  உடல்நலக் கோளாறு அகலும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்னைகள் தீரும்.

போட்டிகள்  குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாகப் புரிந்து கொண்டு  சங்கடப்பட வேண்டி இருக்கும்.  வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும்.  கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக  எதிர்ப்புகள்  நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும்.  பெண்களுக்கு பண
வரத்து திருப்தி தரும். கலைத்துறையினர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். அரசியல்துறையினர் சக தோழர்களுடன் சுமுகமாகப் பேசிப் பழகுவது  நல்லது. மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாகப்
படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வெண்ணைய் சாற்றி வழிபட மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை
அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:  ஞாயிறு, புதன்.

சிம்மம்:
அனைவருக்கும் உதவும் குணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரிக்கிறார். அவர் ராசியை ஏழாம் பார்வையாக பார்த்து அருள் செய்கிறார். தேவையற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். மனவருத்தம் நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல்  வியாபாரம் இருந்தாலும் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள்  உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி  இருக்கும். அரசியல்துறையினருக்கு மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். மாணவர்கள் புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு  மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். கல்வியில் மேன்மை  உண்டாகும்.
பரிகாரம்: சிவனை வணங்கி வர மனக்கவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.

கன்னி:
நம்மால் எதையும் செய்ய முடியும் என்ற எண்ணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் ராசிக்கு மறைந்திருந்தாலும் சுக்கிரன் பார்வையாலும் சனி பகவானின் பார்வையாலும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தித் தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். தொழிலதிபர்கள் அதிக பொருளாதார வரவுகளை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் அரசு தனியார் துறைகளில் உள்ளவர்களும் இது வரை இருந்த ஆடம்பர செலவினங்களைத் தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபமங்களச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் கணவன், மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். ஆயுள் அபிவிருத்தி  பெறுவதற்கான வகையில் உங்கள் நற்செயல்கள் இருக்கும். தந்தை வழி சார்ந்த உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தை  கண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை உங்களிடம் கேட்டுப் பெற வருவார்கள். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு பணத்தேவை உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்துப் போவது நல்லது.
பரிகாரம்: முடிந்த வரை அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வலம் வரவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:  வியாழன்,சனி.

துலாம்:
கனிவான பேச்சும் நளினமான தோற்றமும் உடைய  துலா ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரனின் உச்ச சஞ்சாரத்தால் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். குடும்பத்தில் திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். வயது வந்த புத்திரர்கள் உள்ளவர்களுக்கு நல் உதவிகளும் கிடைக்கப்பெறும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆயுள் அபிவிருத்தி அடைவதற்கான வகையில் கிரகங்கள் செயல்பட உள்ளதால் அதற்கேற்றவாறு பழக்கவழக்கங்களை அமைத்துக்கொள்ளுங்கள்.  பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் தொழில் மேன்மை பெறுவார்கள். கலைத்துறையினர் நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் சுமுகமான உறவு ஏற்படும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.  பாடங்களில் கவனம் செலுத்துவது  அதிகரிக்கும்.
பரிகாரம்:  அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வரவும். மல்லிகை மலரை சாத்தி வழிபடவும்
அதிர்ஷ்ட கிழமைகள்:  வியாழன்,
சனி.

விருச்சிகம்:
மற்றவர்களின் மனம் கோணாமல் பழகும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். தொழிலதிபர்கள் புதிய வாடிக்கையாளர்களை நிரம்பப் பெறுவார்கள். நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள்.   அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரியும் உத்தியோகஸ்தர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும். கணவன், மனைவி குடும்ப ஒற்றுமையில் அனுகூல பயன்கள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு சிறிது பொறாமைப்படுவார்கள். பெண்களுக்கு சீரான வாய்ப்புகள் வரும். குழப்பமான மனநிலை அகலும். கலைத்துறையினர் முன்யோசனையுடன்  திட்டமிடல் அவசியம். அரசியல்துறையினருக்கு புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.   திறமையுடன்  காரியங்களை
செய்வீர்கள்.
பரிகாரம்: முடிந்த வரை அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:  ஞாயிறு, வெள்ளி.

தனுசு:
தனது எண்ணங்களை துணிந்து செயல்படுத்த நினைக்கும் தனுசு ராசி அன்பர்களே,
இந்த காலகட்டத்தில் ராசியில் இருக்கும் கிரக கூட்டணியால் வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த தடங்கல்கள் நீங்கும். தேவையற்ற மனக்கவலை அகலும். வழக்கு விவகாரங்களில் வேகமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு நீங்கும். கிடப்பில் இருந்த கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தைத் தருவதாக இருக்கலாம். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம்,  கவனம் தேவை.  பணிபுரியும் பெண்கள் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து கொட்டும். அரசியல்துறையினருக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்குத் தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள்  செயல்பாடுகள் இருக்கும்.
பரிகாரம்:  நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மஹாகணபதியை வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைப்பளு நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி.

மகரம்:
தனது எண்ணங்களை வெளிப்படுத்தத் தயங்கும் மகர ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சனி பகவானின் சஞ்சாரத்தால் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். புதனின் சஞ்சாரம் பணவரவைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் தடங்கல்கள் அகலும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள்.  சிலர் புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும்.  வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள். பெண்கள் தங்களது பொருட்களை கவனமாகப் பாதுகாத்துக்கொள்வது நல்லது. அரசியல்துறையினர் வீண்பிரச்னைகளில் தலையிடாமல்  ஒதுங்கிவிடுவது நன்மைதரும். கலைத்துறையினருக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவர்கள் முதல்தர  மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர்  வாங்கித்தருவர்.
பரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரியானுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.அதிர்ஷ்ட கிழமைகள்:  செவ்வாய், சனி.

கும்பம்:
புதுவிதமான சிந்தனைக்கு வரவேற்பு அளிக்கும் கும்ப ராசி அன்பர்களே,  இந்த காலகட்டத்தில் ராசியில் இருக்கும் சூரியன் புதனால் நல்ல பலன்கள் உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னைகளில் சாதகமான நிலை காணப்படும். தானதர்மம் செய்யவும்  ஆன்மிகப் பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூரப்பயணங்கள்  செல்ல நேரலாம். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் எல்லா பிரச்னைகளும் சரியாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக  முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பெண்கள் அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். கலைத்துறையினருக்கு மனோ தைரியம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு புதிய எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது  ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.பரிகாரம்: தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துவிநாயகப் பெருமானை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக்கஷ்டம் தீரும்.அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

மீனம்:
மற்றவர்களைப் பற்றி கவலைப் படாமல் இருக்கும் மீன ராசி அன்பர்களே,  இந்த காலகட்டத்தில் ராசியில் இருக்கும் பெண் கிரகமான சுக்கிரனின் சஞ்சாரத்தால் கோபமான பேச்சு, டென்ஷன்  ஆகியவை குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்
திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும்.  பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும்.  வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். கலைத்துறையினர் மனதில் எதைப்பற்றியாவது சிந்தித்த  வண்ணம் இருப்பீர்கள்.  அரசியல்துறையினருக்கு மேற்கொள்ளும் முயற்சிகள்  வெற்றிபெறும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும்.
பரிகாரம்: தினமும் அபிராமி அந்தாதி சொல்லி அம்மனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன்,
வியாழன்.