ப்ரியங்களுடன்...



*எழுபது கபடி வீராங்கனைகள் மற்றும் வசதியில்லாத மாணவிகளை தேர்வு செய்து பயிற்சி அளித்து வரும் ‘கபடி வீராங்கனைகளின் காட்ஃபாதர்’ சிவகுமார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! பாராட்டுகள்!
- என்.ஜெயம் ஜெயா, காரமடை.

*வாசிப்புப் பழக்கமே குறைந்து வரும் வேளையில் மாணவர்களை சிறார் எழுத்தாளர்களாக உருவாக்கும் தமிழ் ஆசிரியர் பூர்ணிமாவை அனைவரும் பாராட்டி ஒரு சலாம் போடலாம்.
- கா.சித்ரா காமராஜ், கோவை.

*கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வானொலியில் ஆர்ஜேவாக வலம் வந்து இன்று உணவகம் நடத்தி வருகிறார் விஷ்ணுப்பிரியா. உண்மையான உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி இம்மூன்றும் இருந்தால் வெற்றி நிச்சயம்!
- வண்ணை கணேசன், சென்னை.

*கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உணவகத்தை நடத்தி, வெள்ளைக்காரர்களை இட்லி, தோசைக்கு அடிமைப்படுத்தி இருக்கும் மார்டினா மெஜீபாவின் சாதனை பிரமிக்க வைத்துவிட்டது. தொடரட்டும் அவரின் வெற்றி.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

*கவிதை, ஓவியம் என இரண்டிலும் ஜோராகப் பயணிக்கும் சிவானந்தம் அவரது வித்தியாசமானப் படைப்புகளைப் போன்று, அவரும் வித்தியாசமான மனிதர்தான் என்பதை உணர்ந்தோம்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

*அரசுப்பணி எனக்கு கிடைத்த ஒரு வரம். குழந்தைகளின் நலனிற்காக செயல்படும் போது அது மனசுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொன்ன மனோசித்ராவின் பேட்டி சிறப்பாக இருந்தது.
- கோகிலாராஜு, திருவாரூர்.

*ஹைதராபாத்தை சேர்ந்த ஆகர்ஷனா 9 வயதில் இருந்து நூலகம் அமைக்கும் செயலில் ஈடுபட்டு, 13 வயதில் இதுவரை 19 இலவச நூலகங்களை அமைத்திருப்பது பாராட்டத்தக்கது.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி.

*ஒரு வீடு இரண்டு வெற்றிக்கதைகள் கண்ணில் நீர் திரையிட்டது. படிக்கும் எனக்கே இப்படி என்றால் எப்படித்தான் இவர்கள் தடைகளை தாண்டி வந்தார்களோ? கடவுள் ஒரு வாசலை அடைத்தால் 9 வாசல்களை திறந்து விடுவார் என்பது உண்மை. மேலும் உயர... ஆசைகள் நிறைவேற வாழ்த்துகள்.
- ஜி.ராஜேஸ்வரி, சென்னை.

*விதவிதமான மூலிகைக் கீரை உணவு வகைகளை தந்து உடல் ஆரோக்கியத்திற்கு துணைநின்று விட்டீர்கள். சபாஷ். பாராட்டுகள்.
- கே.எல்.பகவதி, சென்னை.

அட்டைப்படம்: டெல்னா டேவிஸ் புகைப்படம்:கேமரா செந்தில்