பனித்திருவிழா



ஜப்பானில் வருடந்தோறும் குளிர்காலத்தில் பனித்திருவிழா பிரமாண்டமாக நடக்கும். இந்த வருடம் சப்போரா நகரத்தில் உள்ள ஒரு பூங்காவில் பனித்திருவிழா நடந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட பனிச்சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்தன. கொரோனா வைரஸின் பீதியால் தினமும் ஆயிரத்துக்கும் குறைவான மக்களே பனித்திருவிழாவிற்கு வந்தனர். இருந்தாலும் சிறப்பாக அரங்கேறியது பனித்திருவிழா.