டென்டல் துப்பறிவாளர்!



2012 ஆம் ஆண்டு டெல்லியில் வல்லுறவு செய்யப்பட்டு இறந்த மாணவியை ஆய்வு செய்த தடயவியல் மருத்துவர்களில் மரு. ஆஷித்  ஆச்சார்யாவும் ஒருவர்.  தசைகளை போல சிதைவடையாத பற்கள் மூலம் வல்லுறவு நிகழ்வுகளை எளிதில் அடையாளம் கண்டு கூறியது  அவ்வழக்கின் பெரும் திருப்பு முனை.  “ஆண்டுக்கு சராசரியாக இந்தியாவில் 26 ஆயிரம் பல் மருத்துவர்கள் உருவாகின்றனர். அதில்  முதுகலை பட்டதாரிகளின் எண்ணிக்கை 3 ஆயிரம். அதிலும் பாரன்சிக் படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் மிக சொற்பம். இந்தியாவில்  பற்களை ஆராயும் அங்கீ காரம் பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை 10” என தடயவியல் சங்கத்தலைவர் சாம்ராஜ் கூறுகிறார்.
 
பற்களின் கடி தடயங்கள், அனாதை பிணங்களைப் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றுக்கும் பற்களை ஆராய்வது பல்வேறு வழக்குகளில்  குற்றவாளிகளைக் கண்டறிய உதவியுள்ளன. இந்த விவரங்களுடன் டிஎன்ஏ பரிசோதனை தகவல்களும் ஒத்துப்போகும் ஆச்சர்யங்களையும்  டாக்டர் ஹேமலதா பாண்டே சந்தித்துள்ளதாக கூறுகிறார். இவர் இங்கிலாந்தில் தடயவியல் தொடர்பான படிப்பை படித்துவிட்டு  மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில்  பணிபுரிந்துவருகிறார். “வெளிநாடுகளில் பற்களை ஆராய்வது பரவலானது என்றாலும்  இந்தியாவுக்கு அது புதியது” எனும் மரு. ஆஷித்  பாண்டே இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறார்.