பசுமை ஆட்டோ!



ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பொதுப்போக்கு வரத்து தாண்டி உலகப்புகழ்பெற்றது ஆட்டோக் கள்தான் (Tuk-Tuk). இலங்கையைச் சேர்ந்த பொறியாளரான சசிரங்கா டி சில்வா, இந்த ஆட்டோக்களின் எஞ்சினை மாற்றி சூழலை காப்பாற்ற முயற்சித்து வருகிறார். மலிவான  விலையில் எலக்ட்ரிக் மோட்டாரை உருவாக்கி ஐ.நாவின் உதவித்தொகை 10 ஆயிரம் டாலர்களை(ரூ.7,25,650) வென்று சாதித்திருக்கிறார்  சசிரங்கா.

கொழும்புவிலுள்ள மொராட்டுவா பல்கலை ஆசிரியரான சசிரங்கா பத்து லட்சம் மக்களுக்கான எந்திர கிட்டை உருவாக்கி சோதித்து  வருகிறார். இந்தியாவிலிருந்து டூ ஸ்ட்ரோக் ஆட்டோ எஞ்சின்களை இறக்குமதி செய்த இலங்கை அரசு, 2008 ஆம் ஆண்டு காற்று மாசு  காரணமாக அதனை தடைசெய்துவிட்டது. இயற்கை எரிவாயு வண்டி விலை 4,300 டாலர்கள் என்றால் சீனாவிலிருந்து இறக்குமதியாகும்  வண்டிக்கு 5,900 டாலர்கள் செலவாகிறது. “நூறு கி.மீ தொலைவுக்கு சார்ஜ் செய்யும் நிலையங்கள் தேவை.” என்கிறார் ஓட்டுநர்கள் சங்க  தலைவர் ஏ.டி.ஆல்விஸ். விரைவில் கொழும்புவை ஆசியாவின் பசுமை நகராக மாற்றிக்காட்டுவதே என கனவு என வெற்றிக்குறி  காட்டுகிறார் சசிரங்கா டி சில்வா.