ஐ.டி.பி.ஐ. வங்கியில் எக்ஸிகியூட்டிவ் பணி!



வாய்ப்பு

760 பேருக்கு வாய்ப்பு!


ஐ.டி.பி.ஐ வங்கி என அழைக்கப்படும் இன்டஸ்டிரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா (ஐ.டி.பி.ஐ.,) வங்கி நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. இவ்வங்கி முதலில் தொழில் வளர்ச்சிக்காக நிறுவப்பட்ட பிரத்யேகமான ஒரு வளர்ச்சி வங்கியாகும்.

பின் நாட்களில் வர்த்தக ரீதியான வங்கிச் சேவைகளுக்காக ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியபோது இந்த வங்கியின் சார்பான வர்த்தக வங்கியாக ஐ.டி.பி.ஐ வங்கி நிறுவப்பட்டது. அன்று முதல் இன்று வரை வங்கிச்சேவைகளில் தனி முத்திரை பதித்து வரும் ஐ.டி.பி.ஐ வங்கியில் எக்சிகியூடிவ் பிரிவில் காலியாக உள்ள 760 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கான தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி மையத்தில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும். (அரசு ஒதுக்கீட்டு விதிகளின்படி வயதுவரம்பு சலுகை உண்டு.)தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.700. மற்ற பிரிவினருக்கு ரூ.150. ஆன்லைன் மூலமாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.2.2018
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 28.4.2018
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு மையங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.idbi.com/pdf/careers/FinalDetailedAdvertisementforpostofExecutive201805022018.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

- தோ.திருத்துவராஜ்