ஜோக்ஸ்



‘‘இண்டர்வியூல ரொம்ப கஷ்டமான கேள்வியைக் கேட்டுட்டாங்க...’’
‘‘என்ன கேட்டாங்க?’’‘‘பிரதமர் நரேந்திர மோடி இப்போ எந்த நாட்டுல இருக்கார்னு கேட்டாங்க...’’
- சரவணன், கொளக்குடி.

‘‘மன அமைதிக்காக அந்தப் பெண் சாமியாரை அடிக்கடி போய் பார்த்தியே... பலன் கிடைச்சுதா?’’
‘‘கெடைச்சது... சீக்கிரமே அவங்க எனக்கு மாமியார் ஆகப் போறாங்க!’’
- கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.

‘‘டாக்டர் ஏன் தலைதெறிக்க ஓடி வர்றாரு..?’’
‘‘பேஷன்ட் அவருக்கு ஆபரேஷன் பண்றதா
சொன்னாராம்..!’’
- தென்றல் நாசர், சங்ககிரி.

என்னதான் ஒருத்தர் சவுண்ட் பார்ட்டியா இருந்தாலும், தேசிய கீதம் போடும்போது சத்தம் போடாம இருந்துதான் ஆகணும்!
- சவுண்டான தத்துவங்களை ரவுண்டு
கட்டி கூறுவோர் சங்கம்
- கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.

‘‘கூட்டத்துக்கு வர்றதுக்கு எத்தனை பேருக்கு காசு கொடுத்திருக்கோம்னு தலைவர்கிட்ட கணக்கு கரெக்டா சொன்னது தப்பா போச்சா... ஏன்?’’
‘‘இங்கு கூடியிருக்கும் 1,131 தொண்டர்களேன்னு புள்ளிவிவரத்தோட பேச ஆரம்பிச்சிட்டார்!’’
- மு.மதிவாணன், அரூர்.

என்னதான் அனுபவமே சிறந்த பாடம்னாலும், அதையெல்லாம் பரீட்சைக்கு மனப்பாடம்
பண்ண வேண்டியதில்லை!
- மனப்பாடம் பண்ண பயந்தே,
பாதியில் கல்வியை விட்டோர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘பைக்ல போய் ஆக்சிடென்ட் ஆகிற மாதிரி கனவு வருது டாக்டர்!’’
‘‘மறக்காம ஹெல்மெட் போட்டுக்கிட்டு படுங்க!’’
- அ.ரியாஸ், சேலம்.