கவிதைக்காரர்கள் வீதி
*ஆடு மேய்த்த சிறுவனை பள்ளிக்கு இழுத்துச் சென்றது மழை
*ஒழுகும் குடிசையில் நனையாமல் இருக்கிறது அடகுக்கடை ரசீது
*கற்ற கோலம் வரைய விடாமல் செய்தது வாசலில் தேங்கிய மழை நீர்
*கொலுசின் இசையைத் திருடியது வறுமை
*அரிவாள் வெட்டியதில் இனித்தது இளநீரின் ரத்தம்
*மணல் திருடும் வாகனத்தில் மழை நீரை சேமிக்கச் சொல்லும் வாசகம்
*விற்ற வயல்... என்ன செய்யுமோ அந்தக் குருவிகள்
*மீதமிருந்த சோற்றை சுரண்டித் தின்று ஈயச் சட்டியை கழுவிக் கவிழ்க்க முற்பட
வரிசை கட்டி ஊர்ந்து வந்த எறும்புகளுக்காக விட்டு வைத்தேன் சட்டிக்குள் ஒற்றை பருக்கையை!
துளசி ராஜா
|