பிறவிகள்...கதவு, ஜன்னல்,கட்டில், நாற்காலி...இன்னும்பல பிறவிகள்எடுத்துவிடுகிறது,செத்தபின்பும்மரம்!தென்கரை சி.சங்கர், வந்தவாசி.
அனாதைகுடும்பங்கள் எல்லாம்பங்காளிகள் புடைசூழஒற்றுமையாக ஒரே தெருவில்!குலதெய்வம் மட்டும்அனாதையாக நடுக்காட்டில்!எஸ்.இ.பங்காரு, புத்தன்தருவை.
நனைதல்எத்தனை முறை இமைகள்குடைகளாய் விரிந்தாலும்எப்படியும்நனைந்துதான் விடுகின்றனவிழிகள்,கண்ணீர் மழையில்!ஏ.டி.தமிழ்மணி,தளிகைவிடுதி.
தண்டனைதவறு செய்யாமலேயேதோல் உரிக்கிறார்கள்சாத்துக்குடியை!இரா.வசந்தராசன், அரூர்.
கள்ளிக்காடு...பெண்களின் எண்ணிக்கைகுறைந்திருந்தஅந்தக் கிராமத்தில்கள்ளிச்செடிகள் மட்டும்நிறைய இருந்தன!செல்வராஜா,சேலம்.
மரணித்தல்...மணல் அள்ளும் லாரிகளில்அடிபட்டுச் சாகிறதுஒவ்வொரு வறண்ட ஆறும்.பெ.பாண்டியன், காரைக்குடி.
ஒரு துளி!இடிகள் தாங்கிமின்னல்கள் ஏற்றும் உயிர்ப்போடுசூழ்ந்திருக்கும் சிப்பிகள்பலவும் முத்துகள் பெற...தனித்திருக்கிறதுஒரு சிப்பி,அடைமழையின் ஒரு துளிக்கென!அ.மான்விழி ரஞ்சித்,திருவண்ணாமலை.