இந்த வார ராசி பலன்கள்



மேஷம்


சுக்கிரன் சாதகமா இருந்து திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு தர்றாருங்க. நெருங்கிய நண்பர்கள், உறவுக்காரங்ககிட்ட இருந்துவந்த கருத்து மோதல் விலகிடுமுங்க. வாகனப் பழுதை சரிபண்ணிக்கோங்க. வண்டி மெக்கானிக் ஷெட்டுக்குப் போனா, நீங்க மருத்துவமனைக்குப் போகாமல் இருப்பீங்க. 3, 4, 5ம் தேதி காலை 10 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் நடக்கறதால முன்கோபம், டென்ஷன்னு வருமுங்க. மூச்சுப்பிடிப்பு, கணுக்கால் வலின்னு உபாதை வரும். வியாபாரத்துல லாபம் குறையாதுங்க. உத்யோகத்துல மேலதிகாரி பாராட்டுவார். பெருமாளை வழிபடுங்க. துன்பங்கள் தூர விலகும்.


ரிஷபம்
 
புதன் சாதகமாக இருக்கறதால, வேலைகள் பளிச்னு முடியுமுங்க. வெளிப்படையாகப் பேசி பலர் மனதைக் கவர்வீங்க. மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்க. மூத்த சகோதரரோட பண உதவி சரியான சமயத்துக்குக் கிடைக்குமுங்க. தாயாரின் உடல்நிலை சீராகிடும். 5ம் தேதி காலை 10 மணி முதல் 7ம் தேதி இரவு 8 மணி வரை நடக்கற சந்திராஷ்டமம், வீண் அலைச்சல், டென்ஷனை உருவாக்கும். வியாபாரத்துல பாக்கிகள் வசூலாகிடும். உத்யோகத்துல தடைப்பட்ட சலுகைகள் தேடி வரும். வாயுக்கோளாறு, மூட்டுவலின்னு உபாதை வரும். நந்தீஸ்வரரை வணங்குங்க; நன்மைகள் அணிவகுக்கும்.


மிதுனம்

எதிர்பார்த்த பணவரவு இருக்கறதுக்கு, சுக்கிரன் சாதகமாக இருக்கறதே காரணமுங்க. குடும்பத்துல அமைதி உண்டு. பிள்ளைகளோட அடிமனசு ஆசைகளைப் பூர்த்தி செய்வீங்க. தாயார், மனவருத்தம் நீங்கி சுமுகமாவாங்க. சகோதரர் உதவி சமயத்துக்குக் கிடைக்கும். 7ம் தேதி இரவு 8 மணி முதல் 9ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடக்கறதால, முன்கோபம், காரியத்தடைன்னு ஏற்படுமுங்க. வியாபாரத்துல மறைமுகப் போட்டிகளை சமாளிச்சுடுவீங்க. உத்யோகத்துல சக ஊழியர்களின் ஆதரவு உண்டுங்க. வயிற்றுவலி, பல்வலின்னு கோளாறு வரும். யோக நரசிம்மரை வழிபடுங்க. சந்தோஷம் நீடிக்கும்.


கடகம்

வெளிவட்டாரத்துல பெயரும் புகழும் அதிகரிக்குமுங்க. செவ்வாய் சாதகமா இருக்கறதால அரசு அதிகாரிகளோட நட்பும், அதனால ஆதாயங்களும் கிடைக்குமுங்க. பிள்ளைகளோட கோரிக்கைகளை நிறைவேற்றி, சந்தோஷப்படுத்துவீங்க. வலது கண், காதுவலின்னு உபாதை வரும். பால்ய சினேகிதர்களை சந்திச்சு பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீங்க. முன்கோபத்தைக் குறைச்சுக்கணுமுங்க. சொத்துப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமுங்க. வியாபாரத்துல வார பிற்பகுதியில லாபம் பார்க்கலாம். உத்யோகத்துல துணிச்சலா செயல்படுவீங்க. கற்பக விநாயகரை வணங்குங்க; கவலைகள் கரையும்.


சிம்மம்

புதன் சாதகமாக இருக்கறதால சில விஷயங்கள்ல தடுமாறினாலும் வேகமா முடிச்சிடுவீங்க. கணவன்மனைவிக்குள் சச்சரவு நீங்கும். விஐபிங்க எதிர்பாராத வகையில உதவுவாங்க. பழைய கடனைத் தீர்க்க புதுவழி கண்டுபிடிப்பீங்க. அரசியல்வாதிகளோட அறிமுகமும் ஆதரவாக அமையுமுங்க. உறவினர் வருகையால வீட்ல கலகலப்பு நிலவுமுங்க. வியாபாரத்துல பங்குதாரர்கள், வேலையாட்களால ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கிடுமுங்க. உத்யோகத்துல பிறரை நம்பி பொறுப்புகளைக் கொடுக்காதீங்க. நெருப்புக் காயம், கண் எரிச்சல்னு அவதிப்படுவீங்க. காமாட்சி அம்மனை வணங்குங்க; களிப்போடு வாழ்வீங்க.


கன்னி

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற துடிப்போடு செயல்படுவீங்க. சுக்கிரன் சாதகமா இருந்து குடும்பத்துல அமைதி நிலவச் செய்வாருங்க. பிள்ளைகளோட வருங்காலத்துக்கு இப்பவே திட்டங்கள் தீட்டுவீங்க. சிலசமயம், கடந்த கால வேதனை சம்பவங்களை நினைச்சு வருத்தப்படுவீங்க. சகோதரர்கள் கிட்ட அதிக உரிமை எடுத்துக்க வேண்டாங்க. புது வாகனம் வாங்குவீங்க. ஒற்றைத்தலைவலி, வாயுக்கோளாறுன்னு உபாதை வருமுங்க. வியாபாரத்துல வாடிக்கையாளர்கள் அதிகரிப்பாங்க. உத்யோகத்துல தேங்கிய பணிகளை விரைவா முடிப்பீங்க. தட்சணாமூர்த்தியை வணங்குங்க; தடைகளைத் தாண்டுவீங்க.


துலாம்

புதன் சாதகமா இருக்கறதால வெளிவட்டார மதிப்பு அதிகரிக்குமுங்க. கணவன்  மனைவிக்குள் ஆக்கபூர்வமான விவாதம் வருமுங்க. பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையைப் புரிஞ்சு நடந்துப்பாங்க. கூடப்பிறந்தவங்க உறுதுணையா இருப்பாங்க. மூச்சுப்பிடிப்பு, சுளுக்குன்னு அவதிப்படுவீங்க. அதிகாரப் பதவியில் இருக்கறவங்களோட உதவி கிடைக்குமுங்க. எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரங்களோட இருந்த சச்சரவு நீங்கி, தோழமை மலருமுங்க. வியாபாரத்துல வாடிக்கையாளர்கள் தேடி வருவாங்க. உத்யோகத்துல உங்கள் கை ஓங்கும். பழனி ஆண்டவரை வணங்குங்க; முன்னேற்றங்கள் அமையுமுங்க.


விருச்சிகம்

தன்னம்பிக்கையோடு செயல்பட்டு காரியங்களை முடிப்பீங்க; குரு சாதகமாக இருக்கறதுதாங்க காரணம். கணவன்மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கிடும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டுங்க. பிள்ளைகள் பொறுப்பாக செயல்படறதைப் பார்த்து சந்தோஷப்படுவீங்க. புது வீடு அல்லது கூடுதல் வசதியோடு வாடகை வீட்டுக்குக் குடிபோவீங்க. கூடப்பிறந்தவங்க யோசனை கேட்டு வருவாங்க. முதுகுவலி, தலைவலின்னு வருமுங்க. வியாபாரத்துல சிலர் அறிமுகம் நன்மை தரும். உத்யோகத்துல பணிகளைத் தேங்க விடாதீங்க. மாரியம்மனை வழிபடுங்க; மங்கலம் பெருகும்.


தனுசு

சுக்கிரன் சாதகமாக இருக்காருங்க; அதனால எதிர்பார்த்தபடி பணம் வந்து சேருமுங்க. குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. குறிப்பாக சமையலறைக்கான நவீன சாதனங்களை வாங்குவீங்க. பிள்ளைகளின் கல்வி, வேலை சம்பந்தமாக சில விஐபிக்களின் சிபாரிசு நாடிப் போவீங்க; வெற்றியும் பெறுவீங்க. மிகக் குறைந்த செலவில் வாகனத்தைப் பழுது பார்ப்பீங்க. வியாபாரத்துல வேலையாட்களின் விசுவாசம் தெம்பு கொடுக்குமுங்க. உத்யோகத்துல சிக்கல் எதுவும் தெரியலீங்க. வயிற்றுக்கோளாறு, மூட்டுவலியால அவதிப்படுவீங்க. கற்பக விநாயகரை வணங்குங்க; சாதனை புரிவீங்க.


மகரம்

புதிய சிந்தனைகள் தோணுமுங்க. அதனால சில பிரச்னைகளுக்கு நீங்களே எதிர்பாராத வகையில் தீர்வும், ஆதாயமும் கிடைக்குமுங்க. பிள்ளைகளோட வருங்காலம் குறித்து குடும்பத்தாரோடு சேர்ந்து முக்கிய முடிவுகளை எடுப்பீங்க. கூடப்பிறந்தவங்க உதவியா இருப்பாங்களே தவிர, உபத்திரவமா இருக்க மாட்டாங்க. புதன் சாதகமா இருக்கறதால, வெளிவட்டாரத்துல உங்க செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்குமுங்க. கண் எரிச்சல், பல் வலின்னு உபாதை வரும். புது திட்டங்களால வியாபாரத்தைப் பெருக்குவீங்க. உத்யோகத்துல புது பொறுப்புகளை ஏற்பீங்க. பெருமாளை வழிபடுங்க. பேரதிசயங்கள் நிகழும்.


கும்பம்

குரு வலுவா இருக்கறதால பழைய பிரச்னைகள் சாதகமான முடிவுக்கு வருமுங்க. பிள்ளைகளோட உடல்நலம் சீராகிடறதால, குடும்பத்துல நிம்மதி நிலவுமுங்க. கணவன்மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்துப் பெரியவங்க ஆசியும் கிடைக்கும். அரசு காரியங்கள்ல ஆவணங்களை முறைப்படுத்தி வெச்சுகிட்டீங்கன்னா சிக்கல் எதுவும் இருக்காதுங்க. வியாபாரத்துல பற்றுவரவு உயரும். பாக்கிகளை நயமாகப் பேசித்தான் வசூலிக்கணுமுங்க. உத்யோகத்துல நிர்வாகத் திறமையை வெளிப்படுத்துவீங்க. காய்ச்சல், சளித்தொந்தரவுன்னு வருமுங்க. நவக்கிரக குரு பகவானை வணங்குங்க; குருவருள் காக்கும்.


மீனம்

போன வாரம் முடிக்க முடியாமப் போன வேலைகளை இந்த வாரம் சாதகமா இருக்கற சுக்கிரன் முடிச்சுக் கொடுப்பாருங்க. குடும்பத்தார் சந்தோஷத்துக்காக அவங்களோட எங்காவது சுற்றுலா போய்வருவீங்க. மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். வேலை தேடறவங்களுக்கு, மனம்போல வேலை கிடைக்குமுங்க. புது ஆடை, அணிகலன்கள் சேரும். கூடப்பிறந்தவங்க பாசப்பிணைப்போடு நடந்துப்பாங்க. முதுகுத்தண்டில் வலி, பசியின்மைன்னு ஏற்படுமுங்க. வியாபாரத்துல காலாவதியாகாத பழைய சரக்குகள் விற்றுத் தீருமுங்க. உத்யோகத்துல எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமுங்க. சிவபெருமானை வழிபட்டு சிறப்பு பெறுங்க.