கவிதை வனம்



மாற்றுப்பாதை

சற்றுமுன் போயிருந்த
இறுதி ஊர்வலத்தின்
மரணத்தின் வாசம் வீசும்
பூக்கள் இறைந்து கிடக்கும்
பாதையில் பயணிக்கும்போது
மனம் சற்றே
பயணித்துப் பார்க்கிறது
தன்னையும்
ஓர் ஊர்வலத்தில் வைத்து


- ரவி கிருஷ்

ஒத்திகை

தின்று களித்துப்
பெருத்துக் கொழுத்த
கூழாங்கல்லொன்று
கொஞ்ச தூரம்
நதியின் திசையை
மாற்றிக்கொண்டிருக்கிறது.

- திரு வெங்கட்