தொங்கு சட்டசபை!



சரோஜாதேவி பதில்கள்

* வண்டைத் தேடி பூ போவது எப்போது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
வண்டுக்குத்தான் பூ தேவை. மலர்ந்ததுமே வந்து அமரவேண்டியது வண்டின் கடமை.

* சத்தமில்லா யுத்தம் எது?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
சத்தமில்லா எதுவுமே யுத்தம் ஆகாது.

* தொங்கு சட்டசபை என்றால் என்ன சரோ?
- கே.கே.பி.மணியன், குனியமுத்தூர்.
சரோஜாவுக்கு அரசியலில் ஆர்வமில்லை; ஈடுபட வற்புறுத்தாதீர்கள்.

* நுங்கு ஜூஸ் சாப்பிட்டிருக்கீங்களா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
ஆண்களிடம் கேட்கவேண்டிய கேள்வி.

* காதலர்கள் ஒருவருக்கொருவர் கேட்கக்கூடாத கேள்வி எது?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
காதலித்தபின் கேட்கக்கூடாத கேள்வி, ‘பிடிச்சிருக்கா?’