கன்னா பின்னா



பொண்ணு பார்க்கப் போறேன்!

நாயகன் தியார் நாயர் வெட்டியாக சுற்றித் திரிகிறார். அவருக்கு ஒரு கல்யாணம் காட்சி நடத்தி வைத்துவிட்டால் சரியாகிவிடும் என்று நினைக்கின்றனர் பெற்றோர். தன்னை விரும்பும் அத்தை மகளை புறக்கணித்துவிட்டு புரோக்கர்கள் மூலம் பெண் தேடுகிறார் ஹீரோ. ஃபேஸ்புக்கில் தனக்கேற்ற பெண்ணை தேடும் முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது. கடைசியில் அவருக்கு கல்யாணம் ஆனதா இல்லையா என்பதே கதை.

படத்தின் ஹீரோதான் இயக்குநர். கன்னா பின்னாவென்று அவரது நடவடிக்கைகள் ரசிக்கும்படியாகவே இருக்கின்றன. அஞ்சலிராவ், கிளாமர் போர்ஷனை தாராளமாக நிரப்புகிறார். வில்லனாக நடித்திருக்கும் சிவாவுக்கு வில்லத்தனம் நன்றாகவே வருகிறது.

ரோஷன் சேதுராமன் இசையில் ஃபேஸ்புக் பற்றிய பாடல் தேறுகிறது. ஒரு குத்துப்பாடலும் ஓ.கே. ஜெரால்டு ராஜமாணிக்கத்தின் ஒளிப்பதிவு பரவாயில்லை.தலைப்பு பொருத்தமில்லை என்று சொல்ல முடியாதளவுக்கு கன்னா பின்னாவென்று படம் எடுத்திருக்கிறார் தியார் நாயர்.