படிக்கும்போதே நடிச்சவர்!



புதுமுகம் வர்மாவை நேரில் பார்க்கும்போது ‘பருத்திவீரன்’ கார்த்தியை அச்சு அசலாக உரித்து வைத்திருக்கிறார்.  பேரில்தான் வடக்கு வாசம். நம்புங்கள்! வர்மா திருநெல்வேலித் தமிழன். பிசியோதெரபி, ஐ.டி. என்று பல துறைகளைக் கடந்து இப்போது சினிமாவில் ‘அகத்திணை’ படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

‘அகத்திணை’ படத்தில் முதலாளி, காதலி இருவருக்குமிடையே சிக்கித் தவிக்கும் இரண்டுவிதமான பரிமாணங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

மகிமாவுடன் நிறைய காதல் காட்சிகளில் நடித்திருந் தாலும் சுண்டு விரல் படாதளவுக்கு காதலை கண்ணியமாகக் காட்டியுள்ளாராம் இயக்குனர் மருது.‘‘படிக்கும் போது என்னுடைய கிளாஸ் டீச்சர் “நடிக்காதே” என்று அடிக்கடி சொல்வார்கள். அந்தப் பொறிதான் என்னை கேமரா முன் நிறுத்தியது” என்கிறார் வர்மா.

-எஸ்