அதமட்டும் அஞ்சலிகிட்ட கேட்காதீங்க!



மீடியா என்றாலே எட்டிக்காயாக கசக்கிறது என்று சொன்ன அஞ்சலி, தெலுங்கு மார்க்கெட் சுத்தமாக டல்லடித்த பிறகு திருந்தி விட்டார். இனி தமிழ்ப் படங்கள்தான் கதி என்று சென்னைப் பக்கம் வந்துள்ள அவர், புது பி.ஆர்.ஓ ஒருவரை நியமித்துள்ளார்.

யார் பேட்டி கேட்டாலும் கொடுக்கத் தயார் என்றும், சொந்த வாழ்க்கையைப் பற்றி மட்டும் எதுவும் கேட்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கும் அஞ்சலி, ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கர்’, விமலுடன் ‘மாப்ள சிங்கம்’ படங்களில் நடித்து வருகிறார். முன்பு ‘மூடி’யாக இருந்த அவர், இப்போது ‘கலகல’ டைப்பாகி விட்டார்.